சேலம், ஆக.16- பிரதமர் என்கிற தகுதிக்கான கண்ணியத்தோடு நடக்காமல், சுதந்திரதினத்தை எதிர்க்கட்சிகளை வசைபாடுவதற்கான மேடையாக பயன்படுத்தியிருப்பதாக சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா குற்றஞ்சாட்டினார். சேலம் காட்டூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் து.ராஜா செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது அவர் பேசு கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தான் ஒருபிரதமர் தகுதிக்கு பொறுப்புக்கு கண்ணியத்தோடு பிரச்சனைகளை மக்களிடம் விளக்குவதற்கு பதிலாக, தனது கட்சிக்கு தேர்தல் பிரச்சாரமாக எதிர்க்கட்சிகளை வசைப்படுவதற் காக சுதந்திர தினத்தை பயன் படுத்திக் கொண்டது வருத்தத்தை அளிக்கிறது. தேர்தல் பிரச்சாரகளம் உரு வாகியுள்ளது. பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் நாடு நிலை குலைந்து உள்ளதை அனைவரும் அறிவார்கள். கடந்த காலங்களில் அவர் கொடுத்த வாக்குறுதி என் னானது. குறிப்பாக, ஆண்டுக்கு இரண்டுகோடி வேலை வாய்ப்பு கள், கருப்பு பணம் வெளிக் கொண்டுவரப்படும், ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் செலுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். இது என் னானது என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியாவில் ஒருபகுதியாக உள்ள மணிப்பூரில் அமைதி நிலவவேண்டும், உள்நாட்டு போரில் மக்கள் கொல்லப்படு கிறார்கள். பெண்கள் சொல்லமுடி யாத வன்கொடுமைக்கு உள் ளாக்கப்படுகிறார்கள். பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும், மணிப்பூருக்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கவேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பினோம்.
ஆனால், அமித்ஷா அதைப் பார்த்துக் கொண்டு வருகிறார் என்று மோடி கூறுகிறார். பிரதமர் மௌனமாக இருப் பது, வாய்மூடி கிடப்பது மணிப்பூர் விவகாரத்தில் தீர்வு காண்பதாக இல்லை. இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மணிப்பூர் முதல்வர் பொறுப்பில் இருந்து அகற்றப்படவேண்டும். ஆனால், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தயாராக இல்லை, மணிப்பூரில் ஒருபகுதியை, மற் றொரு பகுதிக்கு எதிராக நிறுத்தி தேர்தலுக்கான அரசியல் லாபம் ஈட்ட வேண்டும் என்று நினைக்கிறார் கள். சுதந்திரதின கொண்டாட்டத் தில் பிரதமர் பேசியது தேர்தல் கால பிரச்சார உரை. மதச்சார்பற்ற ஜன நாயக கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்ற கருத்து அகில இந்தியளவில் உருவாக்கப் பட்டுள்ளது. எதிரணிகள் அனை வரும் ஒன்றிணைத்துள்ளோம். அடுத்த ஆண்டும் நான்தான் தேசி யக்கொடி ஏற்றுவேன் என்று பிரதமர் கூறியது வாய்ச்சவடால், பிரதமர் அச்சத்தில் இருப்பதன் காரணமாக பேசியுள்ளார். பிரதமர் என்ற பொறுப்புடன் சுதந்திரதின விழாவில் பேசியிருக்க வேண்டும். இந்திய அணியில் இருக்கின்ற எல்லாம் கட்சிகளும் அரசியல் முதிர்ச்சிகள் இருக்கிறது. இப் பொழுது இருக்கின்ற உடனடிக் கடமை பாஜகவை வீழ்த்த வேண்டும், மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான். பாஜகவை வீழ்த்தி மாற்று ஆட்சி அமைக்கின்ற சூழல் வரும்போது அனைத்து அர சியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தலைமையை உருவாக்கி ஆட்சி அமைக்க முடியும் என்றார்.