districts

img

ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.19- இந்திய குடியரசு தின அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பொறித்த வாகனத்திற்கு அனுமதி மறுத்த  ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் தியாகி குமரன் நினைவகம் முன்பாக செவ் வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம் யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை  தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் ஒன்றிய அரசை கண்டித்து உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் மாவட்டத் துணைச் செயலாளர் கே.எம்.இசாக், முதல்  மண்டலச் செயலாளர் நடராஜ் இரண்டாவது மண்டலச் செய லாளர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.