சேலம், மே 16- தேவூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர் நீர் மின் தேக்க நிலையம், நெருஞ்சிப்பேட்டை நீர் மின் தேக்க நிலையம், கோனேரிப் பட்டி நீர் மின் தேக்க நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர் மின் தேக்க நிலையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து பவானி வழி யாக திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போது காவிரி ஆற்றில் தண்ணீர் பாறைகளை மூழ்கடித்த வாறு செல்லும். இதற்கிடையே, கடந்த 2 மாதங்களாக குடிநீர் தேவைக்காக குறைவான அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் நீரோட்டம் குறைந்தது. இதனால் தேவூர் அருகே கல் வடங்கம், கொட்டாயூர், ஆத்துக்காடு, கோனேரிபட்டி உள் ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீரின்றி பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.