districts

img

நெருங்கும் பொங்கல் பண்டிகை கால்நடை கட்டு கயிறு வகைகள் விற்பனை தீவிரம்

 நாமக்கல், ஜன. 5- பொங்கல் திருநாள் நெருங்கி வரும்  நிலையில், இவ்விழாவின் கொண்டாட் டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்ற னர். இதன்ஒருபகுதியாக, மாட்டுப் பொங்கலுக்கு தேவையான பொருட்க ளின் விற்பனை தீவிரமடைந்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திரு நாளில் மற்றொரு சிறப்பான நாளாக  இருப்பது மாட்டுப் பொங்கல் திருநாள்  அன்றைய தினம், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், தங்கள் கால் நடைகளை அழகுபடுத்தி பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு சிறப்பு விசேஷ வழிபாடுகளை மேற்கொண்டு அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.   ஆடு, மாடு, எருமை, குதிரை, நாய் கள் உள்ளிட்டவைகளை கட்டுக்குள் கொண்டுவர கயிறு வகைகள் மிகவும்  உதவி வருகின்றது.பொங்கல் பண்டி கைக்கு குறுகிய காலமே உள்ளதால்  பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் கணிசமாக தற்காலிக கடை கள் மற்றும் நிரந்தரமாக செயல்படும் கடைகளில், கால்நடைகளை கட்ட பயன்படுத்தும் கயிறுகள் விற்பனை தீவி ரமடைந்துள்ளது. இது குறித்து வியாபாரி முருகன்  கூறுகையில், விவசாயிகள் கால்நடை களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர  பல விதமான கயிறுகளை பயன்படுத்தி  வருகின்றனர். அவை மூக்கணாங்க யிறு, முகரைக்கயிறு, கழுத்துக்கயிறு, கொம்புக்கயிறு, தலைக்கயிறு, ஆட்டுக் கயிறு, முடிக்கயிறு, சூடிக்கயிறு, சுரு னைக்கயிறு உள்ளிட்ட பல கயிறுகள் உள்ளன. இவைகள் யாவும் நூல் கயிறு கள் ஆகும். இந்த நூல் கயிறுகள் சேலம்  மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள திருமானூர் பகுதியில் அதிக அள வில் தயாரிக்கப்படுகின்றன. இதில்  மேலும் சில வகைகள் நைலான்  இழைகளினாலும் தயாரிக்கப்படுகின் றன. தேங்காய் நாரினால் தயாரிக்கப் படும் கயிறு வகைகள் சேலம் நகரில்  கிடைக்கிறது. முன்பெல்லாம் விவசாயி கள் வீட்டுக்கு  வீடு மாடுகள், எருமைகள், ஆடுகள் ஆகியவைகளை வளர்த்து வந்த னர். இப்போது அவைகளை மேய்க்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டதால், வீட் டில் உள்ள நபர்களின் பால் தேவைக் காக மிக குறைந்த அளவிலான கால்ந டைகளை வளர்த்து வருகின்றனர். இத னால் எங்கள் வியாபாரம் மிகவும் நலிவ டைந்து உள்ளது. தற்போது பொங்கல் விழா என்பதால் வியாபாரம் சற்று சூடு பிடித்துள்ளது என்றார்.