நாமக்கல், ஜூன் 11- நாமக்கல் அருகே வெறிநாய்கள் கடித்ததில், 34 கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், வீசாணம் அருகே உள்ள விட்டப்ப நாயக்கன்பட்டி, ராசாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 29 ஆடுகள் மற்றும் 10 கோழிகளை வளர்த்து வந்தார். இந்நிலை யில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டு இருந்த ஆடு, கோழிகளை பட்டிகளில் அடைத்தார். இதையடுத்து பட்டியி லிருந்த 29 ஆடுகள், 5 கோழிகள் ரத்த வெள்ளத்தில் உயிரி ழந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாஸ் கரன் கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரி கள் உயிரிழந்து கிடந்த ஆடு, கோழிகளை பரிசோதனை செய்த னர். அதில் வெறிநாய்கள் கடித்ததில் ஆடு, கோழிகள் இறந் தது தெரியவந்தது. அதன்பின் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி இறந்த ஆடுகள் புதைக்கப்பட்டன. நாமக்கல்லை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலை யில், ஒரே நாளில் 29 ஆடு, 5 கோழிகளை வெறிநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே ஆடுகள் மற்றும் கோழிகள் இறந்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயி பாஸ்கரனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.