கோகுல்ராஜ் சாதி ஆணவ படுகொலை வழக்கில் சாதி வெறியர்களுக்கு சாகும்வரை சிறை தண்டனை பெற்றுக் கொடுக்க சிறப்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகனை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்ட தலைவர்கள் சந்தித்து கௌரவித்தனர். இந்நிகழ்வில் முன்னணியின் நிர்வாகிகள் பி.பி.பழனிசாமி, எஸ்.மாணிக்கம், பன்னீர்செல்வம், ஜெகநாதன், ஆதித்தமிழர் பேரவை ஆறுமுகம், கார்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் ஆற்றலரசு, பிரேம்குமார், செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.