districts

img

பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் ஊர் நாட்டாமையாக செயல்படும் காவல் துறையினர்: பாலபாரதி

திருப்பூர், ஜன.27- பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான பாலியல் துன்புறுத்தல் வழக்குக ளில் சட்டப்படி செயல்பட வேண்டிய காவல் துறையினர், அதற்கு மாறாக ஊர் நாட்டாமையாக செயல்படும் நிலை இருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாலபாரதி கூறி னார். திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் சார்பில் பெண்கள், குழந்தை கள் மீதான பாலியன் வன்கொடுமை கள் குறித்து பெண் ஆளுமைகளின் கலந்துரையாடல் நிகழ்வு குடியரசு தின மான புதனன்று திருப்பூர் கே.ஆர்.சி.  சிட்டி சென்டரில் நடத்தப்பட்டது. இந்நி கழ்வுக்கு தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் ஆசிரியர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார்.

இதில் கிட்ஸ்  கிளப் பள்ளிக் குழுமம் நிர்வாகி நிவே திதா ஸ்ரீராம், டி.கே.டி. கல்விக் குழுமம் நிர்வாகி பர்வீனா சௌகத் அலி, யுனி வர்சல் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த, டில்லி சட்டப் பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பிடித்த வினோதாரணி ராஜகோபால், மாதர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி, வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீநிதி, ஆர்.சுபா, கவிஞர் அம் பிகா குமரன், ஆசிரியர் சிவகாமி உள் ளிட்டோர் பங்கேற்று பெண்கள், குழந் தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல்  வன்கொடுமைகள்,  குடும்ப உறவுக ளில், பண்பாடு, கலாச்சார அடிப்படை யில் நடத்தப்படும் தாக்குதல்கள், அதற்கு எதிரான போராட்டங்கள், கல்வித் தள செயல்பாடு என பல்வேறு  அம்சங்களை விரிவாக எடுத்துரைத்த னர். மேலும், அண்மையில் திருப்பூர் பள்ளி ஒன்றில் நான்கு வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த் தப்பட்ட சம்பவத்தில் அந்த குழந்தை யின் தாயார், தான் எதிர்கொண்ட  சவால்கள், நெருக்கடிகள் குறித்தும், அதற்கு எதிராக மேற்கொண்ட துணி வான போராட்டத்தையும் எடுத்துரைத் தார். முன்னதாக, தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் கோவை சதாசிவம் இந்த கலந்துரையாடலின் மைய நோக்கு உரை நிகழ்த்தினார். பாடகர் செங்கம் இளங்கோ தொகுத்து வழங் கினார்.

நிறைவாக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலபாரதி சிறப் புரை ஆற்றினார். அப்போது அவர் கூறு கையில், பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை கள், அதற்கு எதிராக கால மாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம், பாலி யல் வன்கொடுமை வழக்குகளில் காவல் துறையினர் ஊர் நாட்டாமை யாக இப்பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்வதற்கும், வழக்குப் பதிவு  செய்யாமல் சமரசம் செய்து வைக்க வும் சட்டத்துக்குப் புறம்பாக மேற் கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இது போன்ற ஒரு நிகழ்வை தமுஎகச முன்மாதிரியாக எடுத்து நடத்துவது மற்ற பகுதிகளிலும் தொடர்வதற்கு வாய்ப்பாக அமையும். போக்சோ சட்டப் பிரிவுகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  சிறு பிரசுரமாக வீடு, வீடாக பெண்களி டம் கொண்டு சேர்க்க வேண்டும் என் றும் கூறினார். இந்த அமர்வில் திருப்பூர் மாவட்ட  தமுஎகசவின் “வணக்கம் திருப்பூர்” என்ற யூ டியூப் சேனலின் லோகோவை தமுஎகச மாநில செயற்குழு உறுப் பினர் ஆர்.ஈஸ்வரன் வழங்க,கே.பால பாரதி வெளியிட்டார். மாவட்டத் தலை வர் பி.ஆர்.கணேசன், மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் உள்பட தமுஎகச நிர் வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்ற னர். நிறைவாக உழைக்கும் பெண்கள்  அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எம்.பாக்கியம் நன்றி கூறினார்.