திருப்பூர், மே 25 - திருப்பூரில் செல்போன் பறிப்பு வழக்கில் 14 நாட்களில் நீதிமன்ற வழக்கு விசாரணை முடித்து குற்ற வாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் கடந்த மே 9 ஆம் தேதி 20.15 மணிக்கு ஏபிடி ரோட் டில் தனது செல்போனில் பேசிச்சென் றார். அந்த நபரிடமிருந்து தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மியக வுண்டம்பட்டியை சேர்ந்த, திருப்பூர் வெள்ளியங்காட்டில் குடியிருக்கும் கோகுல் (20), என்பவர் செல்போனை தட்டி பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப் பூர் மாநகர மத்திய காவல் நிலையத் தில் மே 10ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்திய காவல் நிலைய குற்றப்பி ரிவு காவல் ஆய்வாளர் ஜமுனா, வழக் கில் தொடர்புடைய கோகுல் (20) என் பவரை கைது செய்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி னார். இதைத் தொடர்ந்து மிக குறுகிய காலத்தில், அதாவது இரண்டு நாட்க ளில் புலன் விசாரணை முடித்து, குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்து, நீதி மன்ற கோப்புக்கு எடுக்கப்பட்டு, முறையாக சாட்சிகளையும், சாட்சி யங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தி, 14 நாட்களுக்குள் நீதிமன்ற விசாரணை முடித்து, வழக்கில் சம் பந்தப்பட்ட எதிரிக்கு மே 24ஆம் தேதி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றம் எண்-2-ன் நடுவர் பழனிக்கு மார் மூன்று ஆண்டுகள் சிறை தண் டனை வழங்கினார். இந்தத் தீர்ப்பின் படி கோகுல் சிறையில் அடைக்கப்பட் டார். திருப்பூர் மாநகரத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் களை அடையாளம் கண்டு, அவர்க ளுக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் உட னடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நிலுவையில் உள்ள வழக்கு களுக்கு துரிதமாக தண்டனை பெற்று, அவர்களை சிறையில் இருந்து வெளியே வரவிடாமல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அறிவு றுத்தி இருந்தார். அதற்கு ஏற்ப சிறப் பாக பணியாற்றிய மேற்படி வழக் கின் புலன் விசாரணை அதிகாரி யான மத்திய காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜமுனா மற் றும் புலன் விசாரணைக்கு உதவி யாக இருந்த காவலர்கள் ராஜசேகர், ஜெகதீஷ், சூரியகலா மற்றும் நீதி மன்ற விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் அகஸ்டின் ஆகியோர்களுக்கு திருப் பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு வெகுமதி அளித்து பாராட்டினார்.