சேலம், மார்ச் 27- வேட்பாளருடன் 5 நபர்கள் மட் டுமே செல்ல வேண்டும் எனக்கூ றிய போலீசாருடன், பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி ஒரே கட் டமாக நடைபெற உள்ளது. சேலத் தில் வேட்பு மனுதாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற் றும் மேற்கு வருவாய் வட்டாட்சி யர் அலுவலகம் ஆகிய இரண்டு அலுவலகங்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இங்கு கடந்த மார்ச் 20 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் துவங்கியது. இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். அலுவலகத்திற்குள் வரும் அனைவரையும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்ட னர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 5 நபர்க ளுக்கு மட்டுமே அனுமதி வழங்கி னர். உடன் வரும் நபர்களை 100 மீட் டருக்கு முன்பாகவே போலீசார் தடுத்து நிறுத்தி வந்தனர். இந்நி லையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக புதனன்று, மேலும் பலர் வருவார்கள் என்பதால் போலீசார் தீவிர பாது காப்பில் ஈடுபட்டனர். தேசிய ஜன நாயக கூட்டணி கட்சியில் சேலம் நாடாளுமன்ற தொகுதி பாமக விற்கு ஒதுக்கப்பட்டது. இதனை யடுத்து பாமக சார்பில் அண்ணா துரை வேட்பாளராக அறிவிக்கப் பட்டு, புதனன்று வேட்புமனு தாக் கல் செய்ய புதனன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப் போது அவருடன் வந்த கூட்டணி கட்சியினரை, விதிகளுக்கு உட் பட்டே அனுமதிக்க முடியும் என்ற னர். ஆனால் அதனையும் மீறி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்டனர். அப்போது, வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என போலீசார் கூறியதால், ஆத்திரமடைந்த கூட் டணி கட்சியினர் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னால், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட் டது.
தருமபுரி: பாமகவினர் 20 பேர் மீது வழக்கு
தருமபுரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளரான சவுமியா அன்புமணி, கடந்த மார்ச் 25 தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி 100 மீட்டருக்குள் பாமகவைச் சேர்ந்த 20 பேரும், மேலும் பாமக கட்சி கொடியை ஏற்றி ஒரு காரும் வந்தது. இதையடுத்து விருப்பாச்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் கொடுத்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் துறையினர் பாமகவைச் சேர்ந்த 20 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.