districts

சருகுமான் வேட்டை: 11 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

சேலம், ஜன.18- ஆத்தூர் அருகே அரிய வகை யான சருகு மானை வேட்டையாடிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஒருவரை நாட்டு துப்பாக்கியுடன் வனத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கருமந்துறை கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதி களவில் உள்ளன. மேலும், அடிவாரப் பகுதியான தும்பல் வனச்சரக பகுதி யிலும் அதிகளவில் மான்கள் இரை  தேடி சுற்றி வருகின்றன. இந்நிலை யில் ஆத்தூர் வனக்கோட்டத்திற் குட்பட்ட தும்பல் வனச்சரகத்தில் பொங் கல் பண்டிகை ஒட்டி வனவிலங்கு களை வேட்டையாடுவதை தவிர்க் கும் பொருட்டு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். சின்ன மூலப்பாடி கிரா மம் அருகே தும்பல்காப்பு காடு பகுதி யில் துப்பாக்கி சத்தம் கேட்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சோதனையிட சென்றபோது, வனத்துறையினரை கண்டதும் அங் கிருந்து நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை விரட்டி பிடிக்க சென்ற வனத்துறையினரிடம் ஒருவர் சிக்கி யுள்ளார். அவரிடம் வனத்துறையி னர் நடத்திய விசாரணையில் அந் நபர் சின்ன மூலப்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசார ணையில் 12 நபர்களுடன் அரிய வகை சருகுமானை நாட்டுத் துப்பாக்கி மூலம் கொன்று பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து மானை மீட்ட வனத்துறையினர் தப்பி ஓடிய  பழனிசாமி, ராமன், கோவிந்தராஜ் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும், சருகு மானை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய 6 நாட்டு துப்பாக்கி களையும் பறிமுதல் செய்த வனத் துறையினர் சுப்பிரமணியை ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத்த னர்.