நாமக்கல், மார்ச் 19- ஒன்றிய அரசின் மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தை உடன டியாக திரும்பப்பெற வலியுறுத்தி, குமாரபாளையத்திலுள்ள இருசக் கர வாகன விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் பகுதியில் பிரதான தொழி லில் ஒன்றாக பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடை கள் உள்ளன. குமாரபாளையம் சாலையில் 300க்கும் மேற்பட்ட ஆட் டோ கன்சல்டிங் பைனான்ஸ் நிறுவ னங்கள் இயங்கி வருகின்றன. இந்நி லையில், ஒன்றிய மற்றும் மாநில அரசு புதிதாக விதிக்கப்பட்டுள்ள மோட்டார் வாகன திருத்தச்சட்டப் பபடி, இருசக்கர வாகன உரிமை யாளர்களின் செல்போன் எண்க ளுக்கு ஓடிபி அனுப்புவதன் வாயி லாகவே இருசக்கர வாகனத்திற் கான அபராத தொகை செலுத்து வது, வாகனத்திற்கான இன்சூ ரன்ஸ் புதுப்பிப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வது, எச்.பி கேன்சல் செய்வது என அனைத்திற்கும் வாகன உரிமையாளரின் ஓடிபி தேவைப்படுகிறது. இதனால் பழைய வாகனங்களுக்கு கடன் கொடுத்த ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் உரிமையாளர்கள் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகி உள் ளனர். இந்த சட்டத்தால் இருசக் கர வாகன விற்பனை தொழிலே அழியும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளதால், இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி குமாரபாளையத்தில் ஆட்டோ கன் சல்டிங் உரிமையாளர்கள் நலச்சங் கம் சார்பில் கடையடைப்பு மற்றும் இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது. குமாரபாளையம் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆட் டோ கன்சல்டிங் நிதி நிறுவன கடை கள், இருசக்கர பழுது பார்க்கும் பட்டறைகள், புதிய வாகன விற்ப னையகங்கள் என அனைத்தும் கடையடைப்பு செய்து, 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத் தில் பேரணியாக சென்று குமாரபா ளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து குமாரபாளையம் ஆட் டோ கன்சல்டிங் பைனான்ஸ் சங்க தலைவர் பாஸ்கரன் கூறுகையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தால் ஏற்கனவே கடன் பெற்றுள்ள பழைய வாகனங்கள் மற்றும் விற்பனைக்கு வந்துள்ள பழைய வாகனங்களை விற்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கு உரிய தீர்வு காண வேண்டும். இச்சட்டத் தால் கடந்த ஒரு மாத காலமாக வியா பாரம் இல்லாமல் பெயர் மாற்றம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் வாடிக்கையாளர்களின் கேள் விக்கு பதில் சொல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் உள் ளோம். இந்த பிரச்சனைக்கு உடன டியாக தீர்வு காண வேண்டும், என் றார்.