districts

img

உடுமலை நகராட்சி: திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் தோல்வி

உடுமலை, மார்ச் 4-  உடுமலை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் தோல்வியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை நக ராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந் நிலையில், திமுக சார்பில் 24 ஆவது வார்டில் வெற்றி பெற்ற இளைஞர் அணி மாவட்ட செயலாளர்  ஜெயக்குமார் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்தது. இந்நிலை யில், இவருக்கு எதிராக உடுமலை நகர செயலாளரும், 15ஆவது வார்டு உறுப்பின ருமான மத்தீன் போட்டியிட்டார். இத்தேர்த லில்  திமுக போட்டி வேட்பாளரான  மத்தீன்   25 வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றார் .  அதேநேரம், திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் ஜெயக்குமார் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். திமுக தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து  போட்டியிட்டவர் வெற்றி பெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை நகராட்சியில் அதிக இடங் களில் திமுக உறுப்பினர்கள்  வெற்றி பெற்ற நிலையில், திமுக தலைமை அறி வித்த வேட்பாளரே படுதோல்வி அடைத் தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத் துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை அறி வித்த வேட்பாளர் ஜெயக்குமார் கூறு கையில், கட்சி தலைமை அறிவிப்புக்கு எதி ராக செயல்பட்டவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் எப்பொழுதும் கட்சியின் தலைமை எடுக்கும் முடிக்கு  கட்டுப்பட்டு நடத்து வருபவன், முதல்வர் தளபதி நல்லாட்சி திட் டங்களை மக்களிடம் தொடர்ந்து கொண்டு  செல்வேன் என்றார்.  இதற்கிடையே, மாலையில் துணை தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறி வித்த நிலையில், கூட்டத்தில் 16 நகரமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட தால், போதிய உறுப்பினர்கள் இன்றி  துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது.