ஈரோடு, நவ.22- ஈரோடு மாவட்டத்தில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சு.முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஈரோடு மாவட்டம், காலிங்கராயன்பாளையம் துணை சுகா தார நிலைய வளாகத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட தொடக்க விழா, ஆட்சியர் ராஜ கோபால் சுன்காரா தலைமையில் நடைபெற்றது. புற்று நோய் கண்டறியும் திட்டம் மற்றும் ரூ.3.63 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டு, மருத்துவ உபகர ணங்கள் வழங்கப்பட்டன. அப்போது, அமைச்சர் சு.முத்துச் சாமி பேசுகையில், புற்றுநோய் அதிகம் பாதித்துள்ள மாவட் டங்களாக கண்டறியப்பட்ட ஈரோடு, திருப்பத்தூர், கன்னியா குமரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சமு தாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங் களில் இலவசமாக புற்றுநோய் பரிசோதனைகள் நடை பெறும். இத்திட்டத்தினை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசு கையில், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் தமிழ்நாட்டில் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின் றன. இதன் தொடர்ச்சியாக, புற்றுநோயிலிருந்து பொதுமக் களை பாதுகாக்கின்ற வகையில், ரூ.3.31 கோடி செலவில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் புற்றுநோய் கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. தற்போது தமிழ்நாட்டிலும் துவக்கப்பட்டுள்ளது. மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், பொதுமக்களின் ஆரோக்கியம் பெறு கின்ற வகையில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துவங் கப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாச்சலம், சி.கே.சரஸ்வதி, பொது சுகாதாரம் மற்றும் நோயத்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வ விநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.