உடுமலை, ஜன.16- உடுமலை ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றி யத்திலிருந்து 14 ஊராட்சிகளை நகராட்சியு டன் இணைக்க நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே தொடங்கப்பட்ட பேருந்து நிலை யம், பாதாளச் சாக்கடை, சாலைகள், குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகள் முடிக்கப் படாமல் உள்ளது. புதுப்பிக்க வேண்டிய பேருந்து நிலையம்: நகரின் மையப்பகுதியான பொள்ளாச்சி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1964 ஆம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டப் பட்டது. பின்னர் 1996 ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, போக்குவ ரத்து நெரிசலை கட்டுப்படுத்த பேருந்து நிலை யம் விரிவாக்கம் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், இன்றுவரை பணிகள் முடிக்கப்படா மல் உள்ளது. முழுமையடையாத பாதாளச் சாக்கடை திட்டம்: நகராட்சியில் கடந்த 2013 ஆண்டு சுமார் 56.5 கோடியில் கிட்டதட்ட 97 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, இன்னும் முழுமையாக பணிகள் நிறைவேற்றப்படா மல் உள்ளது. இந்த திட்டத்தினால் நகரில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும், முறையாக சுத்திக ரிப்பு செய்து கழிவு நீர் செல்வது இல்லை. மக்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் வகையில், பாதாள சாக்கடை திட்டத்தின் குறைகளை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவமனை விரிவாக்கம்: உடுமலை அரசு மருத்துவமனையை உடு மலை தாலுக்கா பகுதி மக்கள், மடத்துக் குளம் பகுதி மக்கள், மலைவாழ் மக்கள் உட் பட தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே நகராட் சிக்கு சொந்தமான 90 சென்ட் இடத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தை மருத்துவமனை விரி வாக்க பணிகளுக்கு பயன்படுத்த வேண் டும். உட்கட்டமைப்பு வசதிகள்: சந்தை சாலையில் உள்ள அண்ணா பூங் காவில் கடந்த ஒரு வருட காலமாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டும், மக்கள் பயன்பாட் டிற்கு வராமல் உள்ளது. இதனால், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும். மேலும், நகராட்சி சாலைகள் மற்றும் நெடுஞ் சாலைத்துறையின் சாலைகளில் உள்ள ஆக் கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த வேண்டும். சாலைகளில் மின் விளக்குகளை நவீனப்படுத்த வேண் டும். விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு பயன்படும் சந்தையை சுகாதாரக்கேடு ஏற்ப டாத வகையிலும் சீரமைக்க வேண்டும். குப் பைகளை தரம் பிரிப்பது மற்றும் அகற்றுவ தற்குத் தனியார் ஒப்பந்த தொழிலாளர் களை நம்பி இருக்காமல் நகராட்சி நிர்வாகமே தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண் டும். இது போன்ற மக்களின் அன்றாடம் பிரச்ச னைகளை, நகராட்சி விரிவாக்க பணிகள் தொடங்கும் முன்பே சரி செய்ய நகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.