districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிறுபான்மையினருக்கு  கடன் வழங்க முகாம்

ஈரோடு, ஆக.19- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கடன் வழங்க சிறப்பு முகாம்  அறிவிக்கப்பட்டுள்ளது, தனி நபர் கடன், சுய உதவிக்குழு கடன், கல்விக் கடன்,  கைவினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்களின்  கீழ் ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் வரும் 22 ஆம் தேதி  சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதேபோல் ஈரோடு பெரி யார் வீதியில் 24ஆம் தேதி, அம்மாபேட்டையில் 28ஆம்  தேதி, கவுந்தப்பாடியில் 30ஆம் தேதி முகாம் நடை பெறுகிறது. இதேபோல், கோபியில் செப்டம்பர் 2ஆம் தேதியும், அவல்பூந்துறையில் செப்-5ஆம் தேதி, கொடுமுடியில் செப்-7ஆம் தேதி, சிவகிரியில் வரும் 12ஆம் தேதியும், பெருந்துறையில் செப்-14ஆம் தேதி, ஈரோடு-சோலாரில் செப்-19ஆம் தேதியில் முகாம்கள் நடைபெற உள்ளன.  இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

வாகனத்திற்கு சார்ஜ் ஏற்றியப் போது தீ விபத்து

சேலம், ஆக.19- மின்சார வாகனத்திற்கு சார்ஜ் ஏற்றியப் போது ஏற்பட்ட தீ  விபத்தில், வீட்டுக்குள்  சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள்  மீட்டுள்ளனர்.  சேலம் நகரம், கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளியன்று காலை வீட்டின் கீழ் தளத்தில் இருந்து, தனது மின்சார வாக னத்தின் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றினார். அப்போது மின் கசிவு  ஏற்பட்டு திடீரென பேட்டரி தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் வீடு  முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருந்த  கமலக்கண்ணன், இவருடைய மனைவி சாரதி, குழந்தை அர்ஜீனன், தந்தை பெரியசாமி, தாயார் சாந்தி ஆகிய 5  பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நிலையில், அனைவரும் வீட்டின் முதல் மாடிக்கு சென்றனர். இதுகுறித்து கமலக்கண்ணன், தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர் கள் சம்பவ இடத்திற்கு சென்று கரும்புகையில் சிக்கிக் கொண்ட 5 பேரையும் மீட்டனர். பின்னர், தீயை அணைத் தனர்.

கொடுமுடி பகுதியில் 30 தெருநாய்கள் பிடிபட்டது

ஈரோடு, ஆக.19- கொடுமுடி மற்றும் சென்னசமுத்திரம் பேரூராட்சியில் 30 தெரு நாய்கள் பிடிபட்டது. ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட சென்னசமுத்திரம் மற்றும்  கொடுமுடி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு  நாய்கள் சில நபர்களை கடித்தது. இவ்வாறு பாதிக்கப்பட் டவர்கள் வெள்ளியன்று அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இதுகுறித்து புகாரையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறி வுறுத்தலின்படி தெருநாய்களின் தொல்லைகளை கட்டுப் படுத்தும் பணி தொடங்கியது. மதுரையிலிருந்து தெரு நாய்  பிடிப்பவர்கள் வாகனத்துடன் அழைத்து வரப்பட்டனர். சனி யன்று உரிமையாளர்கள் மற்றும் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் சுமார் 30 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டதாக சென்ன சமுத்திரம் பேரூராட்சியினர் தெரிவித்தனர்.

ரேசன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

தருமபுரி, ஆக.19- தருமபுரியில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உணவுக் கடத்தல் தடுப்பு போலீசார், ரேசன் அரிசி கடத்துபவர்களைக் கண்காணித்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அகரம் ஜங்சன் அருகில் உணவுக் கடத்தல் தடுப்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கனரக வாகனத்தில் 4.7 டன் ரேசன் அரிசியைக் கடத்திய தருமபுரி, சோளக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூரைச் சேர்ந்த முருகன் மற்றும் காரிமங்கலம், கும்பரஹல்லியைச் சேர்ந்த சம்பத்குமாா் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்நிலையில் தருமபுரி, சோளக்கொட்டாயைச் சேர்ந்த செல்வராஜ், ரேசன் அரிசிக் கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததால் கள்ளச் சந்தை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உணவுக் கடத்தல் தடுப்பு போலீசார் பரிந்துரையின்பேரில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தரவுப்படி, செல்வராஜ் கள்ளச் சந்தை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தொடர்ச்சியாக ரேசன் அரிசி கடத்துவோர் மீது கள்ளச் சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவுக் கடத்தல் தடுப்பு போலீசார் தெரிவித்தனர்.

காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கக் கோரி அவிநாசியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

அவிநாசி, ஆக.19 - அவிநாசியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர்,  அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளிக்கி ழமை மாலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தரை யில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியத்  தலைவர் ஜோதி தலைமை வகித்தார். இணைச்செயலாளர் ஜெயஸ்ரீ, ஒன்றியச் செயலாளர் சுமதி கோரிக்கைகளை விளக் கிப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலா ளர் ராமன், வட்டச் செயலாளர் கருப்பன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய பொரு ளாளர் ரேவதி, வேளாண்மை துறை மாவட்ட அமைப்பு செய லாளர் சின்ராசு, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் காலி பணியிடங்களை நிரப்ப  வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் களிடமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.

கவிதாலட்சுமி நகரில் நாய் தொல்லை கட்டுப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், ஆக.19- திருப்பூர் மாநகராட்சி 14ஆவது வார்டு கவிதாலட்சுமி நக ரில் சாலை வசதி, சாக்கடை வசதி செய்து தர வேண்டும், நியா யவிலை கடை கட்டித்தர வேண்டும், தெரு நாய்களைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  முதலாம் மண்டல உதவி ஆணையரிடம் மனு அளிக்கப்பட் டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நக ரக்குழு உறுப்பினர் ஆர்.சுகுமார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. கவிதாலட்சுமி நகரில் தரமான தார்ச்சா லைகளாக மாற்றிடவும், கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரி சுத் தம் செய்திடவும் வேண்டும். இப்பகுதி மக்கள் வசதிக்கு புதிய  நியாயவிலை கடை கட்டித்தர வேண்டும். மேலும், தெருநாய் கள் தொல்லை அதிகரித்து குழந்தைகளை அச்சுறுத்தி வரு கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்,  நகரக்குழு உறுப்பினர்கள் பி.பாபு, ஆர்.கவிதா, அ.ஆறுமு கம், பி.சின்னச்சாமி, பி.நவபாலன், பாத்திரத் தொழிலாளர் சங் கப் பொருளாளர் என்.குபேந்திரன், சங்க நிர்வாகக் குழு உறுப் பினர் நடராஜ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட னர்.

ஸ்ரீநகரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன் றியம் ஸ்ரீநகர் கிளை சார்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.ஸ்ரீநகர் கிளை செயலாளர் கே.விஸ்வநா தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மணிப் பூர் கலவரத்தை கட்டுபடுத்தாத ஒன்றிய பாஜக அரசை கண் டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் மேட்டுபாளை யம் பகுதியில் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். மாஸ் பேக்கரியில் இருந்து கருப்பராயன்  கோவில் வீதி வரை உள்ள அனைத்து சாலைகளையும் சீர மைக்க வேண்டும் என பகுதி கோரிக்கைகளை வலியுறுத் தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், முன்னாள்  மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், வடக்கு ஒன்றிய செயலா ளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகா மணி, வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பாண்டியன் உட் பட திரளானோர் பங்கேற்றனர்.

ரூ.12 கோடி பள்ளி இடத்தை பாதுகாக்க சுற்றுச்சுவர் அவசியம்: முதல்வருக்கு கடிதம்

திருப்பூர், ஆக. 19 – திருப்பூர் மாநகராட்சி 25ஆவது வார்டில்  காவிலிபாளையம் புதூர் ஆரம்பப்பள்ளி அமைந்துள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள இடத் தைப் பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பள்ளி பெற்றோர் ஆசிரியர்  கழகத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கடி தம் எழுதப்பட்டுள்ளது. காவிலிபாளையம் புதூர் ஊராட்சி ஒன் றிய ஆரம்பப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழ கத் தலைவர் என்.முத்துசாமி ஊர்ப்பொது மக் கள் சார்பில் முதல்வருக்கு வெள்ளியன்று  அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் மாநகராட்சியின் 25ஆவது வார்டில் உள்ள காவிலிபாளையம் புதூரில்  பள்ளிக்குரிய ரூ.12 கோடி மதிப்புள்ள 1.44 ஏக் கர் இடம் உள்ளது. இங்கு ஆரம்பப்பள்ளி யும், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றன.  இப்பள்ளிக்குச் சொந்தமான காலி இடத்தை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்ற நிலையில், பள்ளியின் நலன் மீது அக்கறை கொண்ட ஊர்மக்களின் முன் முயற்சியால் காலிஇடம் உள்ளிட்ட பள்ளி வளாகத்தைச் சுற்றி 1000 அடி நீளம் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 350 அடி நீள  சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மீதி 650 அடி  நீளத்துக்கு கம்பிவேலி அமைக்கப்பட்டுள் ளது. இந்த கம்பிவேலி உள்ள 650 அடி நீளத்துக் கும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டால் அது பள்ளி  வளாகத்திற்குப் பாதுகாப்பாக இருப்பது டன், எதிர்காலத்தில் பள்ளியின் விரிவாக்கத் திற்கும் மிக உதவியாக இருக்கும். எனவே  முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி காவிலி பாளையம் புதூர் பள்ளிக் கட்டிட வளாகத் தில் மீதியுள்ள 650 அடி நீளத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்திட உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என பள்ளி மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் என்.முத்துசாமி கேட் டுக் கொண்டுள்ளார்.

சிறுவர் பூங்கா திறப்பு 

அவிநாசி, ஆக.19 - அவிநாசி பேரூராட்சி நியூ  டவுனில் ரூ.20 லட்சம் மதிப் பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேரூ ராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி சிறுவர் பூங் காவை திறந்து வைத்தார். பேரூராட்சி செயல் அலுவர் ராமலிங்கம், பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலைப் பொறியாளர் ராஜவேல், உதவி செயற்பொறியாளர் பி.மோகன், சுகாதார ஆய் வாளர் கருப்பசாமி, ஒப்பந் ததாரர் கண்ணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

பணம் பறித்த  2 பேர் கைது

கோவை, ஆக 19- உக்கடம் அருகே வாலிப ரிடம் பணம் பறித்த 2 பேரை  போலீசார் கைது செய்தனர். கோவை, உக்கடம் அன்பு நகர், 3 ஆவது தெருவைச் சேர்ந்தவர் அமீன் (எ) இடி அமீன் (26). இவர் தள்ளு வண்டியில் கடலை வியாபா ரம் செய்து வருகிறார். இவர்  தனது நண்பருடன் பேருந் தில் காந்திபுரத்திலிருந்து உக் கடம் வந்தார். அப்போது பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பேர் அவரது சட்டைப்பாக்கெட்டில் இருந்து ரூ.500ஐ பறித்து  கொண்டு தப்பி செல்ல முயன் றனர். இதனால் அதிர்ச்சிய டைந்த அமீன் அங்கிருந்த வர்கள் உதவியுடன் இருவ ரையும் பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தார். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பணம் பறிந் தது பெரம்பலூரைச் சேர்ந்த  சரவணன் (26), பொள்ளாச்சி யைச் சேர்ந்த புவின்ராஜ் (22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.

பொய் செய்தி வெளியிடும் தினமலர்: இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கண்டனம்

திருப்பூர், ஆக.19- இடுவாய் ஊராட்சியில் நடைபெற்ற  கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சிச்  செயலர் தலைமை ஏற்றதாக உண் மைக்கு புறம்பான செய்தி வெளியிட் டிருக்கும் தினமலர் நாளிதழுக்கு கண்ட னம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி, பாரதிபுரம் சமுதாய நலக் கூடத்தில் இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் க.கணேசன் தலைமையில் சுதந்திர தினத்தன்று (ஆக.15) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் கிராம நிர்வாக அலுவலர், ஊரக உள்ளாட்சித் துறை, சுகாதாரத்துறை, வேளாண் துறை அதிகாரிகளும், மாவட்ட இலவச சட்ட உதவி மைய  வழக்கறிஞர்களும், ஊராட்சி பொதுமக் களும் திரளாகக் கலந்து கொண்டனர். அரசு வழிகாட்டுதல்படி, கொடுக்கப் பட்ட அஜெண்டாக்கள் பற்றிப் பேசி தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டும், நியாயவிலைக் கடை களில் தேங்காய் எண்ணெய் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் அளித்த மனுக்கள் பெறப்பட் டன. கிராமசபையில் நடைபெற்ற சம்ப வங்கள் இவ்வாறு இருக்கையில், அரசி யல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக வைச் சேர்ந்த சிலர் ஊராட்சிமன்றத் தலைவர் கிராம சபைக்கு தலைமை ஏற் கக்கூடாது என கொடுத்த, சட்டத்திற்கு புறம்பான கோரிக்கை ஆரம்ப கட்டத்தி லேயே நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி  செய்யப்பட்டது. ஆனால் தினமலர்  பத்திரிகையில் சிலரை திருப்திப்படுத்த  வேண்டும் என்பதற்காக, ஊராட்சி செய லாளர் தலைமையில் கூட்டம் நடந்ததாக தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற தவறான செய்தியை வெளியிட்டு ஊராட்சிமன்றத் தலைவர் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்கு தினமலர் நாளிதழுக்கு கணேசன் கண் டனம் தெரிவித்துள்ளார். கிராமசபை யில் நடைபெற்ற உண்மை செய்திகளை வெளியிட வேண்டும். இது மாதிரி ஆதார மற்ற செய்தியை வெளியிட்டு தனது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற் காக தினமலர் மீது சட்டபூர்வ நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டியது இருக்கும் என்றும், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

வேன் ஓட்டுநர் மீது தாக்குதல்

சூலூர், ஆக.19- சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஹாரன் அடித்த  வேன் ஓட்டுநரை கார் ஓட்டுநர் ஒருவர் வழிமறித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், சூலூர், ரங்கநாதபுரம் பிரிவு அருகே தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரி யும் ஊழியர்களுடன் திருச்சி சாலையில் காங்கேயம்பாளை யம் நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. பணி  முடிந்ததும் வீடு செல்லும் ஊழியர்களை குறித்த நேரத் தில் இறக்கி விட வேண்டும் என்பதற்காக ஓட்டுநர் யுவராஜ் என்பவர், வேனை அதிவேகமாக இயக்கியதாக தெரிகிறது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்வதற்காக தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்த ராசிபாளையம் பகுதி யைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர், வேனை வழிமறித்து காரிலிருந்து இறங்கி வந்து வேன் ஓட்டுநர் யுவராஜை தாக்கி யுள்ளார். சற்றும் எதிர்பாராத திடீர் தாக்குதலில் நிலை குலைந்த வேன் ஓட்டுநர் யுவராஜ் பலத்த காயமடைந்தார். அரு கில் இருந்தவர்கள் உடனடியாக சரவணகுமாரை தடுத்து நிறுத்தினர்‌. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட் டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார், கார் ஓட்டுநர் மற்றும் வேன் ஓட்டுநர் யுவராஜை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ஹாரன் அடித்ததால் வேன்  ஓட்டுனரை சக வாகன ஓட்டி ஒருவர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.