districts

மீன்வளர்ப்பு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தருமபுரி, டிச.13- பிரதான் மந்திரி மீன்வள மேம் பாட்டு திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பு  செய்திடும்  விவசாயிகள் பல்வேறு திட் டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட  ஆட்சியர் ச.திவ்யதர்சினி விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது, தரு மபுரி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீன வர் நலத்துறை உதவி இயக்குநர் அலு வலகத்தின் மூலம் பிரதான் மந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டம் 2020-21ன்  கீழ் மீன்வளர்ப்பு செய்திடும் விவசாயி கள் பல்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி றது.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவின தொகையான ரூ.7 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவிகித  மானியமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிர மும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் பயனாளிகளுக்கு 60 விழுக்காடு  மானியமாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.  மேலும், ஒரு ஹெக்டேர் பரப்பள வில் உள்ள மீன்வளர்ப்பு குளங்களில் மீன்வளர்ப்பு செய்யும் திட்டத்தின் செலவின தொகை ரூ.4 லட்சத்தில், பொதுப்பயனாளிகளுக்கு 40 விழுக் காடு மானியமாக ரூ.1 லட்சத்து 60  ஆயிரமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு 60  விழுக்காடு மானியமாக ரூ.2 லட்சத்து  40 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

 பயோபிளாக் குளங்கள்  அமைக்கும்  திட்டத்தின் மொத்த செலவின தொகை  ரூ.14 லட்சத்தில் பொதுப்பயனாளிக ளுக்கு  40 விழுக்காடு மானியமாக ரூ.5 லட்சத்து 60 ஆயிரமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிக ளுக்கு 60 விழுக்காடு மானியமாக ரூ.8  லட்சத்து 40 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.  நீரினை மறுசுழற்சி முறை யில் சிறிய அளவிலான தொட்டிகள் அமைத்து நன்னீர் மீன்வளர்ப்பு செய் தல் திட்டத்தின் மொத்த செலவின தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40 விழுக் காடு மானியமாக ரூ.3 லட்சமும், ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் பய னாளிகளுக்கு 60 விழுக்காடு மானிய மாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும் வழங் கப்பட உள்ளது. மேற்கண்ட திட்டங்களில் மாவட் டத்தில் உள்ள மீன்வளர்ப்பு விவசாயி கள் விண்ணப்பித்து பயன்பெற ஏது வாக உரிய ஆவணங்களுடன்  டிச.20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும். அதிக விண்ணப்பங்கள் பெறப்ப டின், முன்னுரிமை மற்றும்  தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், இத்திட் டங்களில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி  இயக்குநர்  அலுவலகம், 1/165 ஏ, இரா மசாமிகவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி,  தருமபுரி - 636705  என்ற அலுவலகத்தை  தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.