districts

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை உடனடியாக நிறுத்து மனித சங்கிலி போராட்டத்திற்கு அறைகூவல்

கோவை, நவ. 13- இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா மீது  தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த  வலியுறுத்தி கோவையில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் முடி வெடுத்துள்ளது.  இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தின் ஒரு பகு தியான காசாமீது கடந்த 7 ம் தேதி முதல்  போர் தொடுத்து வருகிறது. இதனால் காசா வில் பத்தாயிரத்திற்கும் அதிகமான அப்பா விப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், போரின் நெறிமுறைகளை மீறி  இஸ்ரேலின் தாக்குதலில் 4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள் ளனர். பெண்கள், முதியோர் என தொடர்ந்து  கொல்லப்பட்டு வருகின்றனர்.  இஸ்ரேல் அரசு காசாமீது தொடுத்துள்ள இன அழிப்பு போரை உடனடியாக நிறுத்த  வேண்டும் என்பதை வலியுறுத்தி, தொடர்  இயக்கங்களை நடத்த இடதுசாரி கட்சிகளின்  மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக வரும் 20 ம் தேதி மாலை  4.00 மணிக்கு கோவை காந்திபுரத்தில் மனித  சங்கிலிப் போராட்டம் நடத்துவது என்றும் இந்த போராட்டத்திற்கு இடது சாரி மற்றும் முற்போக்கு, பெரியாரிய அம்பேத்கரிய அமைப்புகளை அழைப்பது என்று கோவை யில் நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் ஆலோ சனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகமான ஜீவா இல் லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, பொருளா ளர் சி.தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், சிஐடியூ மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பரமணி யம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.