districts

img

வணிகத் திட்டப் போட்டிகள் - இளைஞர்களுக்கு அழைப்பு

சேலம், பிப்.8- தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடக வர்த்தக மற் றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் வணிகத் திட்டப் போட்டி கள் நடத்தப்படவுள்ளன. இதுதொடர்பாக, சேலம் சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள் ளியப்பா கூறுகையில்,  கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட் டமைப்பு என்பது கர்நாடகாவில் தொழில், வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளுக்கான ஒரு  அமைப்பாகும். இது பாரத ரத்னா  விருது பெற்ற எம்.விஸ்வேஸ்வர யாவால் நிறுவப்பட்டது. இது தனது முதல் நூற்றாண்டை நிறைவு செய்து, அதன் சேவையின் 105 ஆவது ஆண்டில் உள்ளது. இந்த கூட்டமைப்பு மந்தன் என்ற தலைப் பில் வணிகத் திட்ட விளக்கப் போட்டி களை நடத்த உள்ளது. மந்தன் என் பது வருடாந்திர வணிகத் திட்ட விளக்கப் போட்டியாகும். இதனை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 2009 ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இது இப் போது அதன் 14 ஆவது பதிப்பில் உள்ளது. இப்போட்டியானது இளம்  தொழில் முனைவோர் மனப்பான் மையை வளர்க்க, ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.   இந்த விருதுத் திட்டத்தின் மூலம் தென்னிந்தியாவில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிர தேசம் மற்றும் தெலுங்கானா முழு வதும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்  குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் முன் மொழிவுகள் மதிப்பீடு செய்யப் பட்டு, சிறந்த புதுமையான, தொழில் நுட்ப ரீதியாக சாத்தியமான, வணிக ரீதியாக மற்றும் செயல்படுத்தக் கூடிய வணிகத் திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும். மேலும், ஒன்றிய அரசின் “ஸ்டார்ட்- அப் இந்தியா” மற்றும் “யங்க் இந் தியா” முயற்சிகளின் கனவிற்கு இந்த போட்டிகள் பெரிய ஊன்று கோளாக இருக்கும் என்றும் சோனா  கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தெரிவித்துள்ளார். இப்போட்டியில், கல்லூரி மாண வர்கள், இளம் தொழில் முனை வோர்கள் கலந்து கொண்டு பயனடை யுமாறு கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சிவசண்முகம், மந்தன் தலைவர் அபிஷேக் ஆகி யோர் கேட்டுக்கொண்டனர். மேலும், மந்தன்-2022 வணிகத் திட்ட போட்டி  பதிவுக்கான கடைசித் தேதி பிப்.28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள் ளது என்றும், மேலும் விவரங்க ளுக்கு www.mantan.fkcci.org  என்ற இணையதளத்தை அணுக லாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.