உதகை, ஆக.8- விலைவாசி உயர்வுக்கு அரசின் முறையான திட்டமிடுதல் இல்லா ததே காரணம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித் துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின் மாநில பொதுக் குழு கூட்டம் நீலகிரி மாவட்டம், உத கையில் செவ்வாயன்று நடைபெற் றது. மாவட்டத் தலைவர் முகமது பாரூக் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், தமிழ்நாடு உள்ளாட்சி கடை வியாபாரிகள் பல்வேறு பிரச்சனை கள் தொடர்பாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரதிநிதி கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநி லம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு களுக்குட்பட்ட கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிக ளாக மாவட்டந்தோறும் ஒருவரை தேர்வு செய்து மாநில கமிட்டியை ஏற் படுத்த வேண்டும். ஜிஎஸ்டி-ல் பதிந்து வணிகம்செய்து வரும் வணிகர்கள் மீது எந்த நேரத்திலும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்யவும், கைது செய்யவும் ஒன்றிய அரசு ஆலோசனை செய்து நடைமுறைப் படுத்த உள்ளதாக தெரிகிறது. ஒன் றிய அரசு இத்தகைய ஆலோசனை களை உடனடியாக கைவிட வேண் டும். தற்போது மாதந்தோறும் ஜிஎஸ்டி கணக்கை 20 ஆம் தேதிக்குள் பதி வேற்றம் செய்ய வேண்டும். ஒரு நாள் தாமதித்தாலும் அதற்கு தண்ட கட்ட ணம் வசூலிப்பதை ஒன்றிய அரசு கைவிடுவதோடு,
பதிவேற்றம் செய் யும் நாட்களை ஒரு வாரத்திற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். இது தொடர்பாக தென்மண்டல நிர்வாகி கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து முறையிட உள்ளோம். தமிழக அரசு சுற்றுச்சூழலை பாது காக்கும்பொருட்டு ஒருமுறை பயன் படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ் டிக் பொருட்களுக்கு தடை விதித்துள் ளது. அதில் பன்னாட்டு நிறுவனங்க ளுக்கும், உணவு பொருட்கள் உற் பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த விதி விலக்கு அளித்து உத்தரவிட்டுள் ளது. அதே விதிவிலக்கு சிறு, குறு வியாபாரிகளுக்கும் வழங்க வேண் டும். வருடந்தோறும் எப்எஸ்எஸ்ஐ உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு உடன டியாக கைவிட்டு, குறைந்தது 3 ஆண் டுகளுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிக்கும் முறையை கொண்டு வர வேண்டும். விலைவாசி உயர்வு 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அர சுகளின் முறையான திட்டமிடுதல் இல்லாததே இதற்கு காரணம் ஆகும். இதற்கு தீர்வு காண விவசாயிகள், வியாபாரிகள் அடுங்கிய சிறப்பு குழு அமைக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கோவை மண்டல தலைவர் சந்திர சேகர், மாவட்டச் செயலாளர் குலசேக ரன், பொருளாளர் லியாகத் அலி உட் பட பலர் கலந்து கொண்டனர். பிளாஸ் டிக் பொருட்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சங்கத்திற்கு புதிதாக தேர்வு செய் யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.