கோவை, ஜூன் 11– பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மூலப் பொருட்களின் நிலையற்ற விலை உள் ளிட்ட ஒன்றிய மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையின் காரணமாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத் திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறு வனங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டேக்ட் தொழில் அமைப் பின் தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது, உற்பத்தி தொழில் துறையில் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு மூலப் பொருட்கள் விலை கடந்த இரண்டு ஆண் டுகளாக தாறுமாறாக அதிகரித்தது. இத னால் குறுந்தொழில் முனைவோர் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வரும் சூழலில் இந்த விலையேற் றம், ஏறக்குறைய அனைத்து குறுந்தொ ழில் நிறுவனங்களையும் கடும் நெருக் கடிக்கு தள்ளியுள்ளது. தற்போது விலை குறைந்து வரும் நிலையிலும். விலையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, ஜாப் வொர்க் கணிசமாக குறைந்துவிட் டது. இதனால் பெரும்பாலான நிறுவனங் களில் இயந்திரங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆண்டுக ளுக்கு மேலான அனுபவம் உள்ள நிறுவ னங்கள் கூட தொடர்ந்து இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் நெருக்கடியால் கோவை மாவட்டத் தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் தொழிலை விட்டு சென்றுவிட்டனர். இதில், ஒரு சிலர் வேறு நிறுவனங்களில் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இந்த காலத் தில் என்னுடைய நிறுவனத்திலிருந்து மட்டும் மூன்று லேத் இயந்திரங்களை தொழில் நெருக்கடி காரணமாக விற் பனை செய்துவிட்டேன். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. மூலப் பொருட்கள் விலை பிரச்சினைக்கு ஒன் றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். மாநில அரசு சிறு, குறு நிறுவனங்களுக்கு மின் கட்டணத்திற்கு மாநியம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு சிறு, குறுந்தொ ழில் நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீள நிலைமையை சீர்படுத்திட கண்கா ணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.