தருமபுரி, அக்.30- 75 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப் பட்ட அரசு பேருந்திற்கு மலைவாழ் மக் கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர், கரியதாதனூர், முல்லை நகர் என 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்க ளில் விவசாய மக்களும், மலைவாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர் கள் தங்கள் உற்பத்தி செய்யும் விவ சாய பொருட்களை சந்தைப்படுத்துவ தற்கும், மருத்துவமனை, அரசின் உத விகளுக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவதற்கும் பேருந்து வசதி இல்லா மல் அவதிபட்டு வந்தனர். சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளாக பேருந்து இயக்கப்படவில்லை. இதுகுறித்து அரசிற்கு நீண்ட நாட் களாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தொடர்ந்து அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டவர்களிடம் கோரிக் கையை கவனப்படுத்தினர். இதையடுத்து மலை கிராமங்க ளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உள்ளிட்டோர் கிராம மக்களின் தேவைகளை குறித்து அறிக் கையாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து முதற்கட்ட மாக குறிப்பிட்ட அளவு மலை கிராமங் களை ஏற்காடு மலையோடு இணைக் கும் புதிய தார்சாலை அமைக்க உத்தர விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற் போது இந்த மலை கிராமங்களுக்கு புதிய பேருந்து இயக்குவதற்கு போக்கு வரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள் ளது, அதன்படி, இந்த மலைவாழ் மக் கள் வாழும் கிராம மக்கள் நகரப் பகு திக்கு வந்து செல்வதற்காக முதல் பேருந்து இயக்கம் போதகாடு பகுதியி லிருந்து பையர் நத்தம், பொம்மிடி, கடத் தூர் வழியாக தருமபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திங்களன்று காலை இயக்கப்பட்ட பேருந்திற்கு மலை வாழ் மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் வரவேற்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறு கையில், எங்கள் கிராமத்திற்கு நீண்ட கால கோரிக்கையாக இருந்த பேருந்து வசதி கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலமாக எங்களது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரு வர். நாங்களும் மிக எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் நகரப் பகுதிக்கு சென்று வருவோம். இதற்கு முழு முயற்சி எடுத்த அனைவருக்கும் நன் றியை தெரிவித்துக் கொள்கிறோம், என் றனர்.