districts

img

கோவை: காளைகளுடன் மோதிய காளையர்கள்

கோவை, ஜன.21- கோவை செட்டிபாளையத்தில் காளைகளுடன், காளையர்கள் மோதிய ஜல்லிக்கட்டு போட்டிகள் பரவசத்தை ஏற்படுத்தியது.  கோவை செட்டிபாளையம் பகு தியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவை வெள்ளியன்று நடத்தி யது. இப்போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளை கள் மற்றும் மாடு பிடி வீரர்கள் பங் கேற்றனர். மாடுகளுடன் வருபவர்க ளும், மாடுபிடி வீரர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 24  மணி நேரத்திற்குள் கொரோனா பரி சோதனை செய்து கொண்ட சான்றி தழ் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு போட்டி, நடை பெற்றது. கொரோனா பேரிடர் காலம் என் பதால், பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் மூலம் மட்டுமே  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேநேரம், ஜல்லிக்கட்டு  நடை பெறும் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர். போட்டி நடைபெறும் பகுதியில்  மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 25 அவசர கால படுக்கைகள் ஏற் படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு படுக்கைக்கும் ஒரு மருத்துவர் மற் றும் இரண்டு செவிலியர்கள் வீதம் நியமிக்கப்பட்டிருந்தனர். இதே போல் 108 ஆம்புலன்ஸ் வாகனங் கள் 10 மற்றும் தனியார் மருத்துவ மனை சார்பில் 5 ஆம்புலன்ஸ் வாக னங்களும் தயார் நிலையில் வைக் கப்பட்டிருந்தன. பிடிபடாத மாடு களுக்கு தங்க காசுகளும், காளை களை அடக்கிய காளையர்களுக்கு தங்க காசுகள், கட்டில், பீரோ, சைக் கிள், கார் உள்ளிட்ட பரிசுகள் வழங் கப்பட்டது.