இளம்பிள்ளை, மார்ச் 30- இடங்கணசாலை அருகே எருது விடும் விழா செவ்வா யன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட இ. மேட்டுக்காடு ஸ்ரீவெள்ளை விநாயகர் கோவில் பங்குனி மாத திருவிழா செவ்வாயன்று நடைபெற்றது. இதனைத்தொ டர்ந்து மாலை எருதாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடை பெற்றது. இந்த எருதாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட எருதுகளும், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர். இந்த நிகழ்ச்சி யினை இ.மேட்டுக்காடு, பரமகவுண்டனூர், கொசவபட்டி, தரவு காடு, ஆண்டிகாடு, சாத்தபளையம், கே.கே.நகர், சிட்டனூர், இடங்கணசாலை, இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு ரசித்தனர்.