districts

பர்லியார் மலைப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்திடுக

மேட்டுப்பாளையம், அக். 24- பர்லியார் மலைப்பகுதியில் அடிக் கடி விபத்தினால் உயிர்ப்பலி ஏற்படும் இடத்தில் தடுப்பு சுவர் அமைத்திட வேண் டும் என சிஐடியு மேட்டுப்பாளையம் தாலுக்கா பொதுத்தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஷா தமிழக முதல்வர் மற் றும் உதகை மாவட்ட ஆட்சியர் உள்ளிட் டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, நீலகிரி மாவட் டத்திற்கு தமிழகம் உட்பட வட மாநி லங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பயணி கள் வருகின்றனர். குறிப்பாக கோடை  காலங்களிலும் தொடர் விடுமுறை காலங் களிலும் அதிகமான சுற்றுலா வாக னங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்று வருகிறது. இந்நிலையில், நீல கிரி மலைக்கு சுற்றுலா வாகனங் கள் சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கும் நேரங்களில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்கின்ற வாகனங் கள் கோத்தகிரி திருப்பி விடப்படுகிறது. மேட்டுப்பாளையத்திற்கு வருகின்ற சுற் றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையத் தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்கிறார்கள்.  இந்நிலையில், மேட்டுப்பாளையத் தில் இருந்து பர்லியார் பகுதியைத் தாண்டி இடதுபுறம் உள்ள வளைவில் (உதகையிலிருந்து வரும் பொழுது வலது புறம்) மிகவும் அபாயகரமான பள்ளம் இருப்பதாலும் தடுப்புச் சுவர் கள் இல்லாததாலும் அடிக்கடி விபத்து  ஏற்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்பட் டுள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படும் இந்த அபாயகரமான வளைவு பகுதி யில் தடுப்புச் சுவர் அமைக்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் இது வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால், அப்பகுதியில் வட மாவட்டம் வட மாநிலங்களில் இருந்து  வரும் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து விடுகிறது. உட னடியாக பர்லியார் பகுதியில் குறிப் பிட்ட இடத்தில் வலுவான தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டும். இதனை தமி ழக முதல்வர் தலையிட்டு அதிகாரிக ளுக்கு உரிய உத்தரவை பிறப்பித்திட வேண்டும். அதேநேரத்தில், கடந்த 22 ஆம்தேதி  இரவு கூட பர்லியார் பகுதியில் அபாய  வளைவில் சுற்றுலா மினி பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட் டது. சுற்றுலா வாகனத்தில் வந்த பயணி களை அப்பகுதி பொதுமக்களும் காவல் துறையினரும் அவசர ஊர்தி ஓட்டுநர்க ளும் விரைவாக மீட்டு வந்து மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு  பெரும்பாலானாரை மேல் சிகிச்சைக் காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நீலகிரி  மலைப்பாதைகளில் அடிக்கடி இது போன்று விபத்து ஏற்படும்போது மேட் டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், மேட் டுப்பாளையம் அரசு மருத்துவமனை யில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  சிகிச்சை அளிப்பதற்காக சிடி ஸ்கேன்  தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

அதற்கு மருத்துவர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பணி அமர்த்தபடா ததால் இருந்தும் செயல்படாமல் உள் ளது. இதனால் நீலகிரி மலைப்பகுதி மட்டுமல்ல மேட்டுப்பாளையம் சுற்றுப் புறப் பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் ஏழை எளிய மக்கள் சிகிச்சை  எடுக்க வேண்டும் என்றால் கோவைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆகவே, தமிழக முதல்வர், அடிக் கடி விபத்து ஏற்படும் மலைப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். குறிப் பாக அடிக்கடி விபத்து ஏற்படும் பர்லி யாறு பகுதியில் விரைவாக  தடுப்புச் சுவர் அமைக்கவும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அமைக்கப் பட்டுள்ள சிடி ஸ்கேன் இயந்திரத்திற்கு மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்கவும், அடிக் கடி விபத்து ஏற்படும் மலைப்பாதைக ளில் பாதிக்கப்படும் பொதுமக்களை  விரைவாக மீட்க கோத்தகிரி சாலை,  உதகை சாலை உள்ளிட்ட மழைச்சாலை களில் முகப்பு பகுதிகளில்அதிநவீன மீட்பு வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.