திருப்பூர், அக். 19 - பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டு வரக்கோரி திருப்பூர் மெயின் தொலைபேசி நிலை யத்தில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அனைத்திந்திய பிஎஸ் என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் ஆகிய வற்றின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூன்று சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக் கூட்டத் திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க திருப்பூர் கிளையின் செய லர் சங்கிலிதுரை தலைமை ஏற்றார். ஓய்வூதியர் கிளைச் செய லர் விஸ்வநாதன் முழக்கம் எழுப்பிட அனைவரும் கண்டன முழக்கமிட்டனர். ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் பா. சவுந்திரபாண்டியன், அதன் மாநில அமைப்பு செயலர் முகம் மது ஜாஃபர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில உதவி செயலர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் உரை யாற்றினர். இறுதியாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநில உதவிச்செயலர் ரமேஷ் நன்றி கூறி இந்த கூட் டத்தை நிறைவு செய்தார்.