பிஎஸ்என்எல் ஊழியர்கள் முழக்கம் பொள்ளாச்சி, மார்ச் 15- பல மாதங்களாக தேங்கியுள்ள சம்பள நிலுவைத் தொகையை உட னடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடி யாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிஎப் போன்ற சட்ட சலுகைகளை அமல்படுத்த வேண்டும். உயிரி ழந்த ஒப்பந்த ஊழியர்களின் குடும் பங்களுக்கு பணபலன்களை கிடைக்க நடவடிக்கை வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை ஆட் குறைப்பு என்ற பெயரில் பணி நீக்கம் செய்வதை கைவிட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஒப் பந்த ஊழியர் சங்கம், ஓய்வூதி யர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒப்பந்த ஊழியர் சங்கத் தின் பொறுப்பாளர் நாகேந்திரன் தலைமை வகித்தார். இதில், பிஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.மனோக ரன், ஓய்வூதியர் சங்க கிளைத் தலைவர் பி.தங்கமணி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட உதவிச் செயலாளர் கே.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். ஈரோடு ஈரோடு பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.தம்பி கலையான் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாநில துணை செயலாளர் வி.மணியன், மாவட்ட செயலாளர் எஸ்.பாலு, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் கே.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், கோபிசெட்டி பாளையம் தொலைபேசி நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பி.சின்னச்சாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் என்.பழனியப்பன், ஒப்பந்த ஊழி யர் சங்க மாநில செயற்குழு உறுப் பினர் எம்.சையத் இத்ரீஸ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.