திருப்பூர், அக். 15 - பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் ஒன்பதாவது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி பெற்றதை அடுத்து திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத் தில் சனிக்கிழமை வெற்றி விழா கொண்டாடப் பட்டது கிளை தலைவர் ராதாகிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பா.சௌந்தரபாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் முகமது ஜாபர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் குமரவேல் நன்றி கூறினார். வெற்றியைக் கொண்டாடும் வகையில், பட் டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.