கோவை, ஜன.24- தொலைத் தொடர்பு நிறுவன சொத்துக்களை பாதுகாக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற் றும் ஓய்வூதியர்களுக்கு 2017 ஜன வரி 1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி உடனே வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை முறைபடுத்தி இஎஸ்ஐ, இபிஎப் பிடித்தங்களை முறைப்படுத்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் நிர்ண யிக்கப்பட வேண்டும். தொலைத் தொடர்பு நிறுவன சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, பொள் ளாச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயிலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, பிஎஸ்என்எல்இயு என்.கோபாலன், ஏஐபிடிபிஏ பி.தங் கமணி ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐபிடிபிஏ ஆர்.பிரபா கரன், பிஎஸ்என்எல்இயு எம்.மதன், டிஎன்டிசிடபில்யுயூ ஓ.ராமச்சந்தி ரன் உள்ளிட்ட பிஎஸ்என்எல் ஊழி யர்கள் மற்றும் ஓய்வவூதியர்கள் சங்கத்தைச் சார்ந்த பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட் டனர்.