கோவை, ஜூலை 31- ஒன்றிய அரசு மக்களுக்கான அரசாக செயல்படவில்லை. கார்பரேட்டுகளின் நல னுக்காக செயல்படுகிறது. இந்த அரசிற்கெதி ராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதிய சங்கத் தின் அகில இந்திய ஆலோசகர் வி.ஏ.என்.நம் பூதிரி அறைகூவல் விடுத்தார். அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூ திய சங்கத்தின் “சுதந்திர தின சிறப்பு கருத்த ரங்கம்” வெள்ளியன்று காந்திபுரம் கமலம் துரைசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.குடியரசு வரவேற்பு ரையாற்றினார். இதில், அகில இந்திய உத விப்பொருளாளர் கே.பங்கஜவள்ளி, பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மகேஸ்வரன், டிஎன்டிசி ஒர்க்கர்ஸ் யூனி யன் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் அகில இந் திய ஆலோசகர் வி.ஏ.என்.நம்பூதிரி பேசு கையில், பாரம்பரியம் மிக்க தொழிற்சங் கத்தை கொண்டது தமிழ்நாடு. அதன் வரலாறு நீண்ட நெடியது. தற்போது நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கி றோம். இதில், தொழிலாளர்களின் பங்கு மிகப் பெரியது. வணிகம் செய்ய வந்த ஆங்கிலே யர்கள், இந்திய மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வந்தனர். நமது பண்பாடு, கலாச்சா ரம், மொழி, தொழில் திறன் ஆகிய அனைத்தி லும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்தி னர். நமது நாட்டின் அனைத்து வளத்தையும் செல்வத்தையும் ஆங்கிலேயர்கள் சூறை யாடி கொண்டிருந்தனர். இந்திய மக்களின் உழைப்பும் சுரண்டப்பட்டது.
1908 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந் தியா டெலிகாம் யூனியன் மற்றும் 1919 ஆம் ஆண்டு இந்தியா போஸ்டல் யூனியன் ஹென்றி பாட்டன் தலைமையில் போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர், சென்னை, வங்காளம் உள் ளிட்ட பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட் டோர் பேரணி சென்றனர். இதே நேரத்தில் தான் கடற்படை புரட்சி மற்றும் தபால் தந்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட் டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த போராட் டங்கள் அனைத்தும் இந்தியர்கள் அனை வரும் ஒன்று திரண்டு ஆங்கிலேயருக்கு எதி ராக போராடி வருகின்றனர் என்பதை உணர்த் தியது. இதன் தொடர்ச்சியாக நாம் விடு தலை பெற்றோம். ஆனால், நாம் எந்தெந்த சலுகைகள், உரிமைகளை போராடி பெற்றோமோ, இவை அனைத்தும் பறிக்கப்பட்டு கொண்டி ருக்கிறது. எட்டு மணி நேர வேலை என்பது தற்போது 12 மணி வேலை நேரமாக மாற் றப்படுகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவ னங்களை ஒன்றிய அரசு விற்று கொண்டி ருக்கிறது. இதேபோல் பிஎஸ்என்எல் நிறு வனம் 2005 ஆம் ஆண்டிலேயே கைவிடப் பட்டு இருந்தது. ஆனால், பல்வேறு போராட் டம் முன்னேற்புகளின் காரணமாக இவ்வளவு காலம் அதை தடுத்து இருக்கிறோம். ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வரும் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னார். ஆனால், தற்போது ரயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசு அல்ல. கார்ப்பரேட் நலன் கருதி செயல்படும் அரசு. நாம் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும், என்றார்.