districts

img

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துக

ஈரோடு, டிச. 17- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அம லாக்க வேண்டும் என  அகில இந்திய  பிஎஸ்என்எல் டி.ஓ.டி. ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய பிஎஸ்என்எல்-டி.ஓ.டி. ஓய்வூதியர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு, மூலப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கொடி யேற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர்  எஸ். மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சின்னசாமி வர வேற்றார். தேசிய கொடியை எஸ்.என். மயில்சாமி, சங்கக் கொடியை என்.சின் னையன் ஆகியோர் ஏற்றினர். அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜ சேகர் மாநாட்டை தொடங்கி வைத்துப்  பேசினார். பொது அரங்க மாநாட்டிற்கு  சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சி.பரமசிவம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எல்.பர மேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.  பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் துணைப்பொது மேலாளர் சாம்.என்.குணாளன், அஞ்சல் துறை ஓய்வூ தியர் சங்கச் செயலாளர் என்.ராம சாமி, பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளர் எஸ்.பாலு, ஒப்பந்த ஊழி யர் சங்க மாநில நிர்வாகி எம்.சையத்  இத்ரீஸ் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். தொடர்ந்து, ஆண்டறிக்கை, நிதி நிலை அறிக்கை, மாவட்ட அளவிலான  பிரச்சனைகள் ஆகியவற்றை முன் வைத்து நிர்வாகிகள் பேசினர். முன்னதாக மாநாட்டில், புதிய பென் சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் அரசு பொதுத் துறை நிறுவனத்தை தனியார்மய மாக்குவதை கைவிடவேண்டும். ஊழி யர்களின் பணி பாதுகாப்பை உறுதி  செய்யவேண்டும். காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். 3ஆவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் வழங்கிட வேண்டும். பிஎஸ்என்எல்-க்கு 4ஜி, 5ஜி சேவை வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி பாது காப்பு, சமூக நல பாதுகாப்பு அமல்ப டுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாவட்டத் தலைவராக பி.சின்னசாமி, மாவட்டச் செயலாளராக என்.குப்புசாமி, மாவட்டப் பொருளா ளராக வி.மணியன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட் டனர். நிறைவாக சங்கத்தின் மாவட்டப்  பொருளாளர் மணியன் நன்றி கூறி னார்.