திருப்பூர், ஜன. 11 - திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலை பேசி நிலைய பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் என். குமரவேல் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கோட்டப் பொறியாளர் வீரக் குமார் தலைமை வகித்தார். கோட்டப் பொறியா ளர் சஜி ஜோசப் முன்னிலை வகித்தார். இள நிலை பொறியாளர் குருசாமி வரவேற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநில உதவிச்செயலாளர் கல்யாண ராமன், தமிழ்நாடு தொழிற்சாலை ஒப்பந்த தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வுபெற்றோர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் பா.சவுந்தர பாண்டியன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே. உன்னிகிருஷ்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நிர்வாகிகள் பாராட்டி பேசினர்.நினைவு பரிசு வழங்கி சந்தன மாலை அணி வித்து குமரவேல் பாராட்டப் பெற்றார். பல் வேறு அமைப்புகளைச் சார்ந்தோர் பெருந் திரளாக பங்கேற்றனர். நிறைவாக குமரவேல் ஏற்புரை ஆற்றினார். மனமகிழ் மன்ற பொரு ளாளர் சங்கிலி துரை நன்றி கூறினார்.