districts

img

கொல்லிமலையில் 4ஜி சேவை பிஎஸ்என்எல் பொது மேலாளா் தகவல்

நாமக்கல், ஆக.3- கொல்லிமலையில் 4ஜி சேவை வழங்கப்படும் என  பிஎஸ்என்எல் சேலம் மண் டல பொது மேலாளர் சி.பி.சுபா தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் புத னன்று அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது, சேலம், நாமக்கல் மாவட்டத்தில், நாமக் கல்-5, ராசிபுரம்-3, சேந்தமங்கலம்-3, கெங்க வல்லி-4, பனமரத்துப்பட்டி-2, வாழப்பாடி-4, ஏற்காடு-12, கொல்லிமலை-13 உள்பட 46  கைப்பேசி கோபுரங்கள் அமைக்க அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. இதில், கொல்லிமலை யில் மட்டும் 13 கோபுரங்கள் அமைக்கப்படு கின்றன. இங்கு ஏற்கெனவே 5 கோபுரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத் திற்குள் 13 கைப்பேசி கோபுரங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதன்பிறகு,  கொல்லிமலையின் அனைத்து பகுதிகளிலும்  பிஎஸ்என்எல் 4ஜி தொடா்பு சேவை கிடைக் கும். இதர பகுதிகளிலும் டிசம்பருக்குள் கோபுரங்களை அமைத்து முடிக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கோபுரம் அமைத்திட ரூ. 1 கோடி வரை  செலவாகிறது. எந்தவொரு தனியார் கைப்பேசி  நிறுவனங்களின் கோபுரம், தகவல் தொடர்பு  இல்லாத பகுதிகளிலேயே இந்த சேவை ஏற்படுத்தப்படுகிறது. இவை தவிர, 2024-இல் நகரம், கிராமப் புறம் உள்பட 60 இடங்களில் பிஎஸ்என்எல். புதிய கைப்பேசி கோபுரங்கள் அமைக்க உள்ளது. மேலும், பி.எஸ்.என்.எல். இணைய தள சேவை பைபர் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 33  ஆயிரம் இணைப்புகள் உள்ளன. பொது மக்கள் பலரும் இந்த சேவையை பெற ஆர்வ முடன் உள்ளனர் என்றார்.