திருப்பூர், பிப். 16 - பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளி யன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடை பெற்றது. அதையொட்டி திருப்பூர் தலைமை தொலை பேசி நிலையத்தில் வெள்ளி யன்று தொழிலாளர்கள் 100 சதவீதம் வேலை நிறுத்தம் செய்தனர். வேலைநிறுத்ததின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, ஊதிய மாற்றம், பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு 4ஜி, 5ஜி சேவையை உடனே வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் பணிகளை அவுட் சோர்சிங் விடக்கூடாது, ஒப்பந்த ஊழியருக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26ஆயிரம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இலாக்கா பதவி உயர்வு அமல்ப டுத்த வேண்டும், பிஎஸ்என்எல் சொத்துக் களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஓய்வூதி யர் சங்கம், ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆகி யவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளைத் தலைவர் என்.குமர வேல் தலைமை ஏற்றார். கிளைச்செயலாளர் கள் சங்கிலிதுரை மற்றும் அருண்குமார் முன் னிலையில் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் பா.சௌந்தரபாண்டியன், மாநில அமைப்பு செயலர் முகமது ஜாபர் உள்ளிட் டோர் உரையாற்றினர். ஓய்வூதியர் அமைப் பின் கிளை செயலாளர் விஸ்வநாதன் வேலை நிறுத்த கோரிக்கை முழக்கம் எழுப்பினார். பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். அதேபோல் உடுமலை, பல்லடம், அவி நாசி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளிலும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுமை யாகப் பங்கேற்றனர்.