கோவை, டிச.1- தனியார் நிநி நிறுவனங்களின் கொடூர வட்டி கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்துஜா பைனான்ஸ், இன்டஸ் இன்ட், அசோக் லைலேண்ட், பஜாஜ் உள்ளிட்ட நிறு வனங்கள் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு அரசு வழங்கிய தவணை கால நீட்டிப்பு வழங் காமல் அபராதம் என்கிற பெயரில் கொடூர மான வட்டி கொள்ளையை அரங்கேற்றி வரு கிறது. குறிப்பாக முழு ஊரடங்கு காலத்தில் ஆட்டோக்கள் இயங்காத 8 மாத காலத்திற்கு முழு அபராதம் வசூலிக்கிறது. கட்ட இயலாத நிலையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை குண்டர்களை வைத்து மிரட்டும் நடவடிக்கை யில் ஈடுபடுகிறது. இத்தகைய தனியார் நிறு வன சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராத தொகை என்கிற பெயரில் கொடூர வட்டி வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு கோவை மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா. செல்வம் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட தலை வர் கே.மனோகரன், பொருளாளர் ஆர்.வேலு சாமி, சிஐடியு ஆட்டோ சங்க பொதுச்செயலா ளர் எம்.கே.முத்துக்குமார், பொருளாளர் எம். மைகேல்சாமி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள், வட்டி வசூல் கொள்ளையை தடுத்த நிறுத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்க ளின் உழைப்பை உறிஞ்சி கொடூர வட்டி வசூ லித்த பணத்தை மீட்டுத்தர வேண்டும். தனி யார் நிதி நிறுவன குண்டர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப் பினர்.