districts

காலமுறை ஊதியம் வழங்கக்கூடாது என்பதற்காகவே, காலை சிற்றுண்டி திட்டம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது

சேலம், செப்.29- காலமுறை ஊதியம் வழங்கக் கூடாது என்பதற்காகவே, காலை உணவு திட்டம் தனியாருக்கு கொடுக் கப்படுவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள் ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் 40 ஆவது சேலம் மாவட்ட பிரதி நிதித்துவ பேரவை சிஐடியு அலுவ லகத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருவேரங்கன் தலைமை யில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சீனிவாசன் செய் தியாளர்களிடம் பேசுகையில், தேர் தல் நேரத்தில், அரசு ஊழியர்களுக்கு  பழைய ஓய்வூதிய திட்ட மற்றும் சத் துணவு, அங்கன்வாடி மற்றும் வரு வாய் கிராம உதவியாளர் ஆகியோர் களுக்கு காலமுறை ஊதியம் வழங் கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனி டையே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலி யுறுத்தி பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், அரசு காலம் தாழ்த்தி வரு வது வேதனையாக உள்ளது.  கொத்தடிமை மற்றும் ஒப்பந்த கூலி முறையை ஒழிக்க வேண்டியது அரசு, மாறாக அனைத்து துறைகளி லும் கொத்தடிமை மற்றும் ஒப்பந்த கூலி முறையை கொண்டு வருகிறது. காலமுறை ஊதியம் வழங்கக்கூடாது என்பதற்காகவே, முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியா ருக்கு கொடுக்க முயல்கின்றனர். ஒன் றிய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு எதிர்த்த நிலையில், அரசு ஊழியர்களின் பொருளாதார கோரிக்கை என்று  வரும்போது மட்டும் ஒன்றிய அரசு அறிவித்த கொள்கைகளை மாநில அரசு அப்படியே அமல்படுத்துகிறது, என குற்றஞ்சாட்டினார். இந்த செய்தியாளர்கள் சந்திப் பின்போது சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பழனியம்மாள், மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்டப் பொருளாளர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.