விசைத்தறி தொழிலாளிகளின் வறுமை: கிட்னியை விற்க மூளைச்சலவை
நாமக்கல், மே 2- பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி, அவர்களின் கிட்னியை விற்க மூளைச்சலவை செய்யப்படுவதாக புகார்கள் எழுந் துள்ளன. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. விசைத் தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட் சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்ற னர். இந்நிலையில், சமீப காலமாக கடன், வறுமை, குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழி லாளர்கள் கிட்னியை விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொ டர்பாக பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் ஊராட்சி உறுப்பினர் பாலசுப்பிரமணியம் தமிழக முதல்வ ருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சி யருக்கும் மனு அனுப்பியுள்ளார். இதனையடுத்து திருச் செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் இமயவ ரம்பன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்க மூளைச்ச லவை செய்யும் புரோக்கர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து விசாரணை தீவிரமாக நடை பெற்று வரும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் பிடிபடு வார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையத்தில் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்பனை நடைபெறுவதாக தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் கிட்னி விற்பனை தொடர்பான புகார்கள் எழுந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நூல் விலையில் மாற்றம் இல்லை என அறிவிப்பு
திருப்பூர், மே 2- மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை. கடந்த மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள் ளது. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர் டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போ தைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரி விப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக் கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட் சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர் டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. நடப்பு மாதத் திற்கான (ஏப்ரல்) நூல் விலையை நூற்பா லைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் கடந்த மாத விலையே தொடரும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 30 எண்ணுக்கு அதிகமான நூல் வகைகள் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத விலை யில் குறைப்பு இல்லை என்றாலும் நடப்பு மாதத்தில் விலை ஏறாமல் இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள் ளது.