தருமபுரி, ஜூலை 19- தருமபுரி அருகே ஆறு வயது சிறுவனை கொன்ற இளைஞர் மீது கொலை வழக்கு மற்றும் போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், புளுதிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுவன் கடந்த 16ஆம் தேதியன்று காணா மல் போனார். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, சிறுவனை போலீசார் தேடி வந்த னர். இந்நிலையில், அதே கிராமத்தில் பயன் பாட்டில் இல்லாத குடிநீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப் பட்டான். இது தொடர்பாக உறவினர் ஒருவரின் மகனான பிரகாஷ் (19) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள் ளார். பின்னர், சிறுவனை கொலை செய்து குடிநீர் மேல்நிலை தொட்டியில் போட்டு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், சிறுவன்கொலையில் ஒருவர் மட்டுமே கொலை செய்திருக்க முடி யாது, வேறு யாரோ உடனிருந்திருக்க வாய்ப் பிருக்கிறது. அவர்கள் யார் என்பதை கண்ட றிந்து கைது செய்ய வேண்டுமென கூறி கொலையான சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத் திற்கு வந்த மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசு பாதம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.