தருமபுரி, டிச.24- தகடூர் புத்தக பேரவையின் சார்பில் 3 ஆம் ஆண்டு புத்தக திருவிழா தருமபுரி மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் வியாழனன்று துவங்கியது. இந்நிகழ்விற்கு தகடூர் புத்தக பேரவை செயலாளர் மருத்துவர் இரா.செந்தில் தலைமை வகித்தார். தலைவர் இரா.சிசுபாலன் வரவேற்றார். மாவட்ட ஆட் சியர் ச.திவ்யதர்சினி புத்தக திருவிழாவை துவக்கி வைத்தார். ராணுவ ஆராய்ச்சியின் சுவையான பக்கங் கள் என்ற தலைப்பில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லி பாபு பேசினார். முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, தருமபுரி அரசு கல்லூரி முதல்வர் கிள்ளிவள வன், ஆசிரியர் பா.இளங்கோவன், தகடூர் புத்தக பேரவை நிர்வாகிகள் ராஜன், இராஜசேகர் சுப்பிரமணி யன், கார்த்திகேயன், கண்ணன் உள்ளிட்ட பலர் பங் கேற்று பேசினர். மேலும், இந்த புத்தக திருவிழா டிசம்பர் 26 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது.