districts

img

ஜூன் 24 முதல் ஜூலை 4 வரை தருமபுரியில் புத்தக திருவிழா

தருமபுரி, ஜூன் 6- ஜூன் 24 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை  தருமபுரியில் புத்தக திரு விழா நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் புத்தகத் திருவிழா முன்னேற் பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமை  வகித்து பேசியதாவது, தருமபுரி மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயத்துடன்  இணைந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வரும் ஜூன் 24 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை 11 நாட்க ளுக்கு புத்தக திருவிழா நடைபெற உள்ளது.  இதனை மிகப்பெரிய அளவில், சிறப்பான முறையில் நடத்த வேண்டும். இம்மாபெரும் புத்தகத் திருவிழாவினை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல் வம் தொடங்கி வைக்க உள்ளார். இப்புத்தக திருவிழாவினை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை,  கவிதை, ஓவியம், பேச்சுப்போட்டிகள் நடத்தப் பட உள்ளன. மேலும், ஜூன் 25 ஆம் தேதி யன்று பல்வேறு துறை சார்ந்த வள்ளுநர்கள், அறிஞர் பெருமக்கள்,

அரசுத்துறை அலுவ லர்கள் பங்கேற்று படித்த வேலைவாய்ப் பற்ற இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் பல்வேறு போட்டி  தேர்வுகள், வேலைவாய்ப்புகள், புதிய  தொழில் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது, என்றார். இதைத்தொடர்ந்து புத்தக திருவிழாவிற் கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தரும புரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தை ஆட்சியர் ச.திவ்யதர்சினி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  முன்னதாக, இந்நிகழ்வில் மாவட்ட வரு வாய் அலுவலர் சு.அனிதா, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை, மாவட்ட முதன்னை கல்வி அலுவலர் கு. குணசேகரன், தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் இரா.செந்தில், தலை வர் இரா.சிசுபாலன், பொருளாளர் எம்.கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் தங்க மணி, பாரதி புத்தகாலயம் சார்பில் அறிவு டைநம்பி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.