புத்தக கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை
உடுமலை, டிச.12- உடுமலைப்பேட்டை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற் றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒரு நாள் புத்தக கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை செவ்வாயன்று நடத்தப்பட்டது. பல்கலைகழக நூலக அதிகாரி ஜி. இரத்தினசபாபதி புத் தக கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த புத்தக கண்காட் சியில் பத்து வெவ்வேறு நிறுவனத்தை சேர்ந்த புத்தக வெளி யீட்டாளர்கள் கலந்து கொண்டு கால்நடை மற்றும் பொது அறிவியல் சார்ந்த புத்தகங்களை பார்வைக்கு வைத்தனர். இந்த புத்தக கண்காட்சியை 118 மாணவ-மாணவிகள் மற்றும் 37 பேராசிரியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.41.90 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்
கோவை, டிச.12- அன்னூரில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-2ன் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதனை, கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, அனைத்து சிறு கிரா மங்களும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியினை முழு மையாக அடைவதை உறுதி செய்ய, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-2 மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் பல்வேறு திட்டங்களுடனும் ஏறத்தாழ 16 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கி ணைத்து ஊரக மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தும் வகை யில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-2ன் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் குளங்கள் புனரமைத்தல், கிராமப்புறசந்தை மேம்பாடு, அங்கான்வாடி மையம், பள் ளிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட 815 பணிகள் ரூ.41.22 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் 788 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்தொடர்ச்சியாக, அன்னூர் வட்டத்தில் நியாயவிலை கடை, வடிகால், சாலை, பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம் பாடு உள்ளிட்ட 35 பணிகள் ரூ.1.73கோடி மதிப்பீட்டில் எடுக் கப்பட்டு 14 பணிகள் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப் பட்டுள்ளன. 21 பணிகள் ரூ.104.4 லட்சம் மதிப்பீட்டில் நடை பெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் நாராணபுரம் கிராமத் தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் அமைப்பு, ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் நடைபாதையும், ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் கட் டப்பட்டுவரும் நியாயவிலை கடை, சிமெண்ட நடைபாதை மற்றும் வடிகால் ஆகியவை சரியான அளவில் அமைக்கப் பட்டுள்ளதா என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், பச்சாபாளையத்தில் ரூ.1.94 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய பொதுகழிப்பிடம் கட்டும் பணி, மாசகவுண்டன் பாளையம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.10.86 லட்சம் மதிப்பில் நியாயவிலைக்கடை கட்டும் பணி, 15 நிதிகுழு மானியத்தில் ரூ.21.44 லட்சம் மதிப்பீட்டில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்டுமான பணி மற்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.1.95 லட்சம் மதிப் பீட்டில் மண் அகழிகள் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சி யர் ஆய்வு செய்தார்.
மக்களை அச்சுறுத்தி வந்த கரடி சிக்கியது
உதகை, டிச.12- பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண் டில் சிக்கியது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பந்தலூர், பெருங்கறை, இரும்பு பாலம், உப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த கரடி, வீட்டின் கதவுகளை உடைத்து, பொருட் களை சேதப்படுத்தி வந்தது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். எனவே, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினரை வலியுறுத்தி வந்தனர். இதையேற்று அத்தி குன்னா, அத்திமாநகர் உட்பட மூன்று இடங் களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அப்போதும் கரடி சிக்காமல் வனத்துறையின ருக்கு போக்கு காட்டியது. இந்நிலையில், அத்திமாநகர் பகுதியில் திங்களன்று இரவில் உலா வந்த கரடி, அப்பகுதியில் வைக்கப் பட்டிருந்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை யினர், உடனடியாக முதுமலை வனக் கால் நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த மருத்து வர் ராஜேஷ், கரடிக்கு மயக்க ஊசி செலுத் தினார். தொடர்ந்து வாகனத்தில் ஏற்றப் பட்டு முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக 5க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, கூண் டில் சிக்கியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
போலி மதுபானம் தயாரித்து விற்பனை: இருவர் கைது
மேட்டுப்பாளையம், டிச.12- மேட்டுப்பாளையம் அருகே போலி மதுபானம் தயாரித்து கேரளாவில் விற் பனை செய்து வந்த மூவரில், இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள காரமடை செந் தூர் நகர் பகுதி உள்ளது. இங்கு, சட்ட விரோதமாக போலி மதுபானங்கள் தயாரித்து, கேரளாவிற்கு விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு பிரி விற்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து, சம்பவ இடத்திற்கு மதுவிலக்கு போலீசார் சென்றனர். அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங் குள்ள தனி வீடு ஒன்றில் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட எரி சாரா யத்தை பயன்படுத்தி, போலி மதுபா னங்கள் தயாரித்து வருவது தெரியவந் தது. இதனையடுத்து வீட்டில் போலி மதுபான தயாரிப்பு பணியில் ஈடுபட்டி ருந்த கேரளாவை சேர்ந்த அருண் (29), சந்தோஷ் குமார்(42) உள்ளிட்ட இரு வரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த வீட்டிலிருந்து சுமார் 1,344 போலி மதுபான பாட்டில்கள், தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிசாராயம், மது பானங்கள் தயாரிக்க தேவையான உப கரணங்கள், ஸ்டிக்கர்கள், ஒரு ஸ்கூட்டி பெப் வாகனம் உள்ளிட்டவற்றை மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், போலி மதுபான தயாரிப்பு கூட மாக இயங்கி வந்த வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
குடிநீர் இணைப்பு கட்டணத்தை குறைக்க கோரி மனு
நாமக்கல், டிச.12- குடிநீர் குழாய் இணைப்பு கட்ட ணத்தை குறைக்க வேண்டும் என வலியு றுத்தி பொதுமக்கள் நாமக்கல் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் நாமக்கல் போஸ்டர் நகர் குடியி ருப்போர் சங்கம் சார்பில், நாமக்கல் நக ராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் நாமக்கல் நக ராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, வார்டுகளாக மாற்றப்பட்டன. அவைக ளுக்கு புதிய குடிநீர் இணைப்பு குழாய் பதிக்கப்பட்டு இணைப்புகள் தரப்பட் டன. குழாய் பதித்தமைக்கு சாலை சீர மைப்பு கட்டணமாக ரூ.3854 மற்றும் மேற் பார்வை கட்டணமாக தலா ரூ.2411 வசூ லிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட் டீஸ் தரப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். எனவே, கட்ட ணத்தை குறைக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது. அம்மனுவை பெற் றுக்கொண்ட நகராட்சி ஆணையாளர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்தார். முன்னதாக, இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமணி, போஸ் டர் நகர் கிளைச் செயலாளர் சி.ரங்க சாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் மணிகண்டன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் சி.மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலர் பழக்கடையில் தீ விபத்து
சேலம், டிச.12- ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் உள்ள உலர் பழக் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. சேலம் மாவட்டம். ஆத்தூர் வட்டம், நரசிங்கபுரம் அருகே உள்ள ஆட்கொல்லி பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்தி ரன். இவருக்கு சொந்தமாக ஸ்ரீகாயத்திரி டிரேடர்ஸ் என்ற பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழக்கடை உள்ளது. இந்நிலை யில், ரவிச்சந்திரன் வெளியூர் சென்ற நிலையில், கடையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவரது தந்தை வழக் கம்போல் இரவு பணியை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், திங்களன்று காலையில் கடையிலிருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு, அவ் வழியே சென்ற பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண் ணீரை பீச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், கணினி உள்ளிட்ட சாதனங்கள் உட்பட ரூ.10 லட்சம் மதிப்பி லான பொருட்கள் தீக்கிரையாகின. இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க கூடும் என தீயணைப்பு துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்தடை
கோவை, டிச.12- கோவையில் புதனன்று (இன்று) தேவணாம்பாளை யம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், சேரிபாளையம், மில்கோவில் பாளையம், குள்ளிசெட்டி பாளையம், கக்கடவு, சோழ னூர், செங்குட்டைபாளை யம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், ஆதி யூர், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி உள்ளிட்ட பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்திடுக
தருமபுரி, டிச.12- பூனையானூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடி யிருப்பில், தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் ஒதுக் கீடு செய்ய வேண்டும் என வலியு றுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனை யானுரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு, தற்போது பயனா ளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வரு கிறது. வீடு ஒதுக்குவதில் அரசு வேலையில் இருப்பவர்களுக்கும், சொந்த நிலம் வைத்திருப்பவர்க ளுக்கும் பெரும்பான்மையாக வீடு கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் முறையாக விண்ணப்பித்த வர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்த விஷ யத்தில் அரசு அதிகாரிகள் பார பட்சமாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி பூனையானூர் பகுதி கிராம மக்கள், அடுக்குமாடி குடியி ருப்பை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு தரப்பில் முறையாக நாங்கள் விண்ணப்பம் அனுப்பிய பின்னர், வீடு ஒதுக்கப்பட்டதாக எங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், நாங்கள் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் வங்கி வரைவு ஓலை வழியாக, குறிப்பிட்ட தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், வங்கி வரைவோலை எடுத்து வந்து அதிகாரியிடம் கொடுத்த போது, அனைத்து வீடுகளும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. தற்போது வீடுகள் எதுவும் இல்லை எனக்கூறி எங்களை புறக்கணித்துவிட்டனர். முறையாக விண்ணப்பித்து தகுதியுள்ள அனைவருக்கும் பாரபட்சமின்றி அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகள் பாரபட்சமின்றி தகுதியுள்ள ஏழைகளுக்கு அரசு கடிதம் மூலம் ஏற்கனவே தெரிவித்து, ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளை வழங்க வேண்டும். இப்பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதற்கு, உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
50 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
நாமக்கல், டிச.12- ராசிபுரம் அருகே 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதில் தொடர் புடைய 4 பேரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகலூர்கேட் பகுதியில் ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் தங்கம், சிவா ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, திருவள்ளுவர் அரசு கலைக்கல் லூரி பின்புறம் உள்ள மதில் சுவருக்கு அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகே இருந்த நான்கு பேர் போலீசாரைக் கண்ட தும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை துரத்தி பிடித்து, வாகனத்தை சோதனை செய்ததில், 50 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்டதும், இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்பதும் தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து, சேலம் மாவட்டம், கருப்பூர், புதுத் தெரு பகுதியைச் சேர்ந்த சதீஸ் (எ) கந்த சாமி (30), முருகேசன் (46), நாமக்கல் மாவட் டம், ராசிபுரம் கட்டணாச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ் (25), கார்த்தி (26) ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர் புடைய ஒருவரை போலீசார் தேடி வருகின்ற னர். இதுகுறித்து மதுவிலக்கு பிரிவு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ செய் தியாளர்களிடம் கூறுகையில், ராசிபுரம் வியா பார நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பிணையில் வரமுடியாத வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள் ளோம். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை யில் 89 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. 124 கிலோ பறிமுதல் செய்யப் பட்டு, 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 19 பேரின் வங்கிக்கணக்கில் இருந்த 2 லட்சத்து 10,660 ரூபாய் முடக்கம் செய்யப் பட்டுள்ளது. அவர்களின் சொத்துக்களும் முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில், 690 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7663 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, என்றார்.