districts

திருப்பூர் மாநகராட்சி ஓட்டுநர்களுக்கு போனஸ், நஷ்டஈடு வழங்க ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்

திருப்பூர், நவ. 28 – திருப்பூர் மாநகராட்சியில் பணியாற் றும் ஓட்டுநர்களுக்கு போனஸ், நஷ்டஈடு  மற்றும் ஈபிஎப் ஊதிய பாக்கிகளை வழங் குவதற்கு அமிர்தா ஒப்பந்த நிறுவனத் திற்கு மாநகராட்சி நிர்வாகம் நோட் டீஸ் வழங்க தொழிலாளர் துறை உதவி  ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் 2016ஆம்  ஆண்டு முதல் அமிர்தா என்ற ஒப்பந்த  நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறு வனத்தில் 120க்கும் மேற்பட்ட ஓட்டுநர் கள் குப்பை வாகனங்களை இயக்கி வந் தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அமிர்தா நிறுவனத்திற்கு பதிலாக  எஸ்.டபிள்யூ.எம்.எஸ். நிறுவனத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவன மாக்கி இருக்கிறது.  இந்த நிலையில் 120க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு அமிர்தா நிறுவனம் இந்த ஆண்டு வழங்க வேண்டிய சட் டப்படியான போனஸ், நஷ்டஈடு ஆகிய வற்றை வழங்கவில்லை. அத்துடன்  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  (ஈபிஎப்) பிடித்தம் முறைப்படுத்த வில்லை. இதில் தீர்வு காண வேண்டும்  என கடந்த நவம்பர் 6ஆம் தேதி மாநக ராட்சி ஆணையரிடம் மனுக் கொடுத்து சிஐடியு சங்கம் வலியுறுத்தி உள்ளது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி  மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரை சிஐ டியு சங்கத்தினர் தொடர்பு கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினர். அதன்  பிறகும் தீர்வு எட்டப்படாத நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஓட்டுநர்கள் செவ்வாயன்று காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஓட்டுநர்களுக்கு இந்த  ஆண்டு வழங்க வேண்டிய போனஸ்  வழங்க வேண்டும், அமிர்தா நிறுவனத்தி டம் வேலை செய்த காலத்திற்கு ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு உரிய நஷ்டஈடு  வழங்க வேண்டும், இந்த ஓட்டுநர்க ளுக்கு ஈபிஎப் பிடித்தத்தை முறைப்ப டுத்த வேண்டும். அத்துடன் மண்டல ஓட் டுநர் கார்த்திக் என்பவரின் ஊதிய பாக் கியை வழங்கிட வேண்டும் என்று வலி யுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் மாந கராட்சி அலுவலகத்தில் இப்போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தொழிலாளர் துறை  உதவி ஆணையர் பிரேமா சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் மற்றும் மாநகராட்சி மாநகர் நல அலுவ லர் மருத்துவர் கௌரி சரவணன் ஆகி யோரை பேச்சுவார்த்தைக்கு அழைத் தார். இதன்படி மாவட்ட ஆட்சியரகத் தில் உள்ள தொழிலாளர் துறை அலுவ லகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற் றது. அமிர்தா ஒப்பந்த நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகை மாநகராட்சி வசம் நிலுவையில் இருக்கும் நிலை யில், அதை விடுவிக்கக் கூடாது. தொழி லாளர்களுக்கு தர வேண்டிய போனஸ்,  நஷ்டஈடு, ஈபிஎப் தொகையை வழங்க அமிர்தா நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர் வாகம் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி அமிர்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்குவதாகவும், அதன்  அடிப்படையில் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய போனஸ், நஷ்டஈடு உள் ளிட்ட சம்பள பாக்கிகளை வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் மாநக ராட்சி நிர்வாகத்தரப்பினர் தெரிவித் தனர்.