districts

img

ஏபிடி நிறுவனத்தில் போனஸ் உடன்பாடு

கோவை, அக்.28 –  ஏபிடி பார்சல் சர்விஸ், ஏஆர்சி, என்ஐஏ குரூப் நிறுவனத் தில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கான போனஸ் உடன்பாடு எட்டப்பட்டுள் ளது. போனஸ் பேச்சு வார்த்தையில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க  தலைவர்கள் பங்கேற்றனர். கோவையை தலைமை யிடமாகக் கொண்ட ஏபிடி  பார்சல் சர்வீஸ், ஏஆர்சி, என்ஐஏ குரூப்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில்  1200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தின்  கிளைகள் தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ளது. இந் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் களுக்கான 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான  போனஸ் குறித்த பேச்சுவார்த்தை  நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களி டையே நடைபெற்று வந்தது. இதில், நிர்வாகத்தின் தரப்பில் நிர்வாக   இயக்குநர், முதன்மை மனிதவள மேம் பாட்டு  அதிகாரி சுப்ரமணியன், உதவிப் பொது  மேலாளர் சண்முகநாதன், முதுநிலை மேலாளர் நாராயணன் மற்றும் துணை மேலாளர் பழனிச்சாமி ஆகியோர் பங் கேற்றனர்.  தொழிற்சங்கத்தின் தரப்பில்  சிஐடியு ஏபிடி தொழிலாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் எஸ்.ஆறுமுகம், தலை வர் எம். அருணாசலம், பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம், பொருளாளர் கே. செவ்வந்தியப்பன் உள்ளிட்டோரும், ஐஎன்டியுசி ஏபிடி தொழிலாளர் சங்கம்  சார்பில் பொதுச் செயலாளர் கே.என்.சண் முகசுந்தரம், பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.  இதில்  ஏபிடி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு 10 சதவீதம்  போனஸ் வழங்க உடன்பாடு எட்டப்பட்டது.