districts

img

உதகை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகை, அக்.6- உதகை ரயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையில் தற்போது இரண்டாவது சீசன் களை கட்டி உள்ளது. இதற்கிடையே ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய தொடர் விடு முறை காரணமாக உதகைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இந்நிலையில், கடந்த அக்.4 ஆம் தேதி யன்று இரவு சுமார் 10 மணியளவில் உதகை காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அடையாளம் தெரி யாத நபர் ஒருவர், உதகை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடி யாக உதகை நகர் முழுவதும் கண்கா ணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் மகேஸ் வரன், ஆய்வாளர்கள் மணிக்குமார், சிவக்குமார் ஆகியோர் தலைமையி லான காவல் துறையினர் உதகை ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடு பட்டனர். இதனால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல் அதிகாரி ஒரு வர் கூறுகையில், உதகை காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட நபர் வெடிகுண்டு இருப்பதாக இந்தியில் பேசியுள்ளார். எனவே, செல்போன் டவர் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்யும் பணிகள் தீவி ரமாக நடந்து வருகிறது. அவர் தில்லி யில் இருந்து தொடர்பு கொண்டு இருக் கலாம் என்று தெரிகிறது, என்றார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதகையில் வெடிகுண்டு வெடிக்கும் என ஆட்சியருக்கு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.