கோவை, ஏப்.18- சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இளைஞ ரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் அஞ்சலி செலுத்தினார். வால்பாறை மூடிஸ் நகரை சேர்ந்தவர் ஹரிகரன் (23). கடந்த 16ம் தேதி சாலை விபத்தில் காயமடைந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, ஹரிஹரனின் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்த கூறப்பட்ட நிலையில் உற வினர்கள் சம்மதத்துடன் உடல் உறுப்பு தானம் செய்யப்பட் டது. அதன்படி ஹரிஹரனின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனை டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கு தானமாகவும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் டயாலிசிஸ் சிகிச் சையில் உள்ள நோயாளிக்கும் அளிக்கப்பட்டது.
இதே போல், கல்லீரல் மற்றும் இரண்டு கண்களும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இளைஞரின் உடல் உறுப்பு தானம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஹரிஹர னின் தாயார் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரி வித்தார். மேலும், உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரி வித்ததற்கு நன்றியும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஹரிஹரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மருத்துவர்கள் உள் ளிட்டோர் உடனிருந்தனர். இதனையடுத்து ஹரிஹரனின் உடலானது அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியரிடம் இளைஞ ரின் உறவினர்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மிகவும் தாமதமாக அளிக்கப்படுவதாகவும், தகுந்த முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் குற்றச் சாட்டை முன்வைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியரும் தகுந்த நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.