திருப்பூர், ஏப்.28- திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா, சர்க்கார் காத் தாங்கண்ணி கிராமம், பாப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் மின்னல்கொடி என்கிற சரசு (68). இவர் தனது மறைவிற்குப் பின் மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக தனது உடலை தானம் செய்ய வேண்டும் என்று விருப்பத்தின் பேரில் பதிவு செய்து வைத்திருந்தார். மேற்படி சரசுவுக்கு வாரிசுகள் ஏதும் இல்லை. அவர்களது சகோதரர்கள் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், சிறிது காலம் படுக்கையில் இருந்த சரசு சனியன்று இரவு 10 மணியளவில் காலமானார். இதைய டுத்து அவரது விருப்பத்தின்படி உடலை ஞாயிறன்று காலை அவரது சகோதரர் கை.குழந்தைசாமி மற்றும் உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தானமாக வழங்கினர். உரிய அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். அவரது இரு கண்களும் ஈரோடு அரசன் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த சமூகப் பணிக்கு ஊத்துக்குளி அரசு மருத்துவமனை பொறுப்பு மருத் துவ அலுவலர் கார்த்திகேயன், தன்னார்வலர் கிருபாகரன், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார், ஊத்துக்குளி வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். இந்த உடல் தான, கண் தான செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.