districts

img

சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி நிறுத்தம்

உதகை, ஜூலை 7- குன்னூரி தொடர் மழை  காரணமாக சிம்ஸ் பூங்கா வில் செயல்பட்டு வந்த படகு சவாரி நிறுத்தம் செய்யப்பட் டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நா டகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை  தீவிரமாக பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்க ளுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழை தான் அதிக அளவு பெய்யும். ஆனால்,  இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட் களாக காற்றுடன் தொடர் மழை பெய்து வருவ தால், குன்னூர் உட்பட மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகி றது. குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக  தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏரி  உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க  ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. ஏரியில் 14 படகுகள் இயக்கப்படுகின்றன. தற் போது தொடர் மழை பெய்து வருவதால் பூங் காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா  ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.