சேலம், மார்ச் 26- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து, விஜய் மக்கள் இயக்கம், அஜித், சூர்யா ரசிகர்கள் இணைந்து ரத்ததான முகாம் சேலத்தில் நடைபெற்றது. மக்கள் தொண்டன் மா.வாசுதேவன் ஏழாவது ஆண்டு நினைவு தின ரத்ததான முகாம் சின்னேரி வயக்காடு பகுதியில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி உதவி பொறியாளர் பால சுப்பிரமணி, கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் ராணி, சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன்குமார், வாலிபர் சங்க மாநகர தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் குருபிரசன்னா, பொருளாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கற்பகம், நாகராஜ், சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ரத்ததான முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று குருதிக்கொடையளித்தனர்.