திருப்பூர், மார்ச் 14- திருப்பூர் அருகே பொதுக் கழிப்பிடம் கட்டுவதற்கு இடையூறு ஏற்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நெழலி சித்தி விநாயகபுரம் பகுதி யில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுக்க ழிப்பிடம் கட்டி தரக்கோரி கடந்த ஜன.22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத் திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் அரசுக்கு சொந்தமான இடத்தில் பொதுக் கழிப்பிடம் கட்ட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக ஒப்பந்த புள்ளி இரண்டு முறை கோரப்பட்டது. ஒப்பந்தம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, கழிப்பி டம் அமையயுள்ள பகுதிக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் வெங்கடாசலம் என்பவர் இதற்கு இடை யூறு ஏற்படுத்துவது தெரியவருகிறது. அவர் மீது நட வடிக்கை எடுத்து, விரைவில் கழிப்பிடம் கட்டும் பணியை தொடங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற் றதாக கூறினார்.