ஈரோடு, செப்.10- அம்மாபேட்டை அருகே உறவி னர் என்று கூறிய வாலிபருடன் மாண வியை அனுப்பி வைத்ததால், எஸ்இடி பள்ளியை முற்றுகையிட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், அம்மா பேட்டை அருகே உள்ள பூனாச்சியில் எஸ்இடி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இப்பள்ளியில் பூனாச்சி கொண்டையன் கொட்டாய் பகுதி யைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒரு வர் 9 ஆம் வகுப்பு படித்து வருகி றார். மாணவி வழக்கம்போல் வெள் ளியன்று காலை பள்ளிக்கு வந்தார். இதன்பின் வெள்ளியன்று மாலை வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிந்த படி பள்ளிக்கு வந்து, சம்பந்தப்பட்ட மாணவியின் மாமா நான் என்று கூறி மாணவியை அழைத்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராத தால், மாணவியின் பெற்றோர் பள் ளிக்கு சென்று விசாரித்தனர். அப் போது வாலிபர் ஒருவர் வந்து, மாமா என்று கூறி மாணவியை அழைத்து சென்று விட்டதாக பள்ளி நிர்வாகத்தி னர் தெரிவித்தனர். அதைக்கேட்ட பெற்றோர், “யார் என்று விசாரிக்கா மல் எப்படி மாணவியை அனுப்பி வைக்கலாம்” என்றுக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவியின் உறவினர்கள் என 100க்கும் மேற்பட் டோர் சனியன்று காலை அம்மாபேட் டையில் இருந்து அந்தியூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள் ளியை முற்றுகையிட்டனர்.
இதன் பின் பெற்றோர் அனுமதி இல்லாமல் மாணவியை யாரோ ஒருவருடன் அனுப்பி வைத்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக மாணவியை மீட்டுத்தர வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த கோபி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் முரளி, அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், அந்தி யூர் வட்டாட்சியர் பெரியசாமி ஆகி யோர் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘பள் ளிக்கு வந்த வாலிபர் ஒருவர் உறவி னர் என்று பொய் கூறி மாணவியை கடத்தி சென்று விட்டார். கடந்த மாதம் உள்ளூர் பண்டிகைக்காக ஒரு மணி நேரம் முன்னதாக மாணவியை அனுப்பி வைக்குமாறு பள்ளிக்கு வந்து தந்தை அழைத்தார். அப் போது மாணவியை அனுப்பாத நிர் வாகத்தினர், தற்போது யாரோ ஒரு வருடன் மாணவியை அனுப்பி வைத் துள்ளனர். எனவே பள்ளி நிர்வாகத் தின் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என போலீசாரிடம் தெரிவித்த னர். இதையடுத்து போலீசார் மாண வியை மீட்டு வர தனிப்படை அமைத் திருப்பதாகவும், முறையாக விசா ரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிய ளித்தனர். அதை ஏற்று போராட்டத் தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.