districts

img

அடிப்படை வசதி கேட்டு முற்றுகை போராட்டம்

கோவை, டிச.19- பொள்ளாச்சியை அடுத்த நல்லூத் துக்குளி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த நல்லூத்துக்குளி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதி மக்கள் பல ஆண்டாக  அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வரு கின்றனர். இதுகுறித்து பல முறை அதி காரிகளிடம் மனு அளித்தும், கிராம  சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றியும் எந்த பலனும் இல்லை.  இந்நிலையில், தங்கள் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீர் செய்து தர வேண்டும். குடி யிருப்பு பகுதிக்கு வடிகால் வசதியுடன்  கூடிய கான்கிரீட் சாலை அமைத்து தர வேண்டும். சமுதாய கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், அக்கிராம பொதுமக்களுடன் இணைந்து ஊராட்சி  மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.